Saturday, 29 June 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு 27/06/2019 இரவு 8;45 முதல் மாவட்ட தலைவர் M. நூர்தீன் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.


அதில் புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.







தலைவராக இப்ராஹிம் 9786384095
செயலாளராக அனீபா 8903289095
பொருளாளராக அக்பர்அலி 6380206961
துணைத்தலைவராக ஜாஹிர் உசேன் 8220204096
துணைச் செயலாளராக மைதீன் பாட்சா 9566819611
மாணவரணி செயலாளராக அஸ்ரப் அலி
ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும்
வாராந்திர மஸ்வரா இன்ஷாஅல்லாஹ் பிரதிவாரம்  புதன் பஜ்ர் தொழுகைக்கு பிறகு என்றும்,
ஐவேளை ஜமாஅத் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவது என்றும்,
நிர்வாக தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாதம் ஒரு தர்பியா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர்கள்
அப்துல்ரஷீத், ரபீக், ஷேக்பரீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 23 June 2019

யாசீன் பாபு நகர் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசீன் பாபு நகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் 23/06/2019 அன்று காலை 10:00 மணி முதல் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் மாபு பாஷா, மற்றும் அனிபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



கிளையின் வரவு செலவு மற்றும் செயல்பாட்டு அறிக்கை தகவல்கள் கலந்துகொண்ட பொதுகுழு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அடுத்து மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தாவா பணிகளின் அவசியம் பற்றியும், சிறப்பாக தாவா மற்றும் சமுதாயப்பணிகளை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஜமாத்தில் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் இம்மை மறுமை பலன்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

அடுத்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் பொதுக்குழுவில் கலந்து கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது

தலைவர்-  சாதிக் 8925357428
செயலாளர்-  ஷரீப் 9384287442
பொருளாளர்-  காதர்   8925754213
துணைத்தலைவர்-  அக்பர் 9943715508
துணைச்செயலாளர்: சதாம் ஹுசைன் 8608621304
மருத்துவணி- யூசுப் 9087910728
தொண்டரணி- ரபீக் 7667444537

மாணவரணி: நியமத்துல்லாஹ் 8667706172

மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், தாவா பணிகளை வீரியமாக செய்யவும் ஆர்வமூட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

VSA நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் 23/06/2019 அன்று காலை 8:00 மணி முதல் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ்  தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் மாபு பாஷா, மற்றும் அனிபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.






கிளையின் வரவு செலவு மற்றும் செயல்பாட்டு அறிக்கை  தகவல்கள் கலந்துகொண்ட பொதுகுழு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.அடுத்து மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தாவா பணிகளின் அவசியம் பற்றியும், சிறப்பாக தாவா மற்றும் சமுதாயப்பணிகளை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஜமாத்தில் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் இம்மை மறுமை பலன்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். 


அடுத்து  கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் பொதுக்குழுவில் கலந்து கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது


தலைவர்-         மீர்ஹுசைன் 8300643327, 8122383327

செயலாளர்-    ஆஷிப் 6382644754
பொருளாளர்- ரூபி 7448851476
துணைத்தலைவர்- ஜாபர் ஷெரீப் 8072285566
துணைச்செயலாளர்: பயாஸ் முஹம்மது 7530018530 
மருத்துவணி- பாபு 9171888900
தொண்டரணி- முஹம்மது ரியாஸ் 7598764524





மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், தாவா பணிகளை வீரியமாக செய்யவும் ஆர்வமூட்டப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்







Sunday, 14 April 2019

உடுமலைக்கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கிளையின் பொதுக்குழு 11-04-18-அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில், கிளை மர்கஸில் நடை

பெற்றது.





இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது
தலைவர்- அப்துல்லாஹ்-8220558952
செயலாளர்- ஜாபர் அலி-7010489608
பொருளாளர்- ஆஷிக் ரஹ்மான்-8973634383
துணைத்தலைவர்- சுலைமான் சேட்-87607444356
துணைச்செயலாளர்கள் ஹபீபுல்லாஹ்-9965350910
முஹம்மது அலி ஜின்னா-9791534321
தொண்டரணி- ரபீக்-9042642126
மாணவரணி- நயீமுல்லாஹ்-6381711507
மருத்துவணி- சையது இப்ராஹீம்-9047747484
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 3 April 2019

ஒருநாள் மாவட்ட தர்பியா - திருப்பூர் மாவட்டம்



                தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 31/03/2019 ஞாயிறு அன்று ஒருநாள் மாவட்ட தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரிஸ்ஹால் பகுதியில் நடந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

இந்த தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி)  31/03/2019 ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகையுடன் ஆரம்பித்து மாலை 4:30 வரை நடைபெற்றது.

அதில் காலை 6:00 முதல் 8:00 மணி வரை
சகோ. M.I.சுலைமான் அவர்கள்தவ்ஹீத் ஜமாஅத் நோக்கவும் வரலாறும் எனும் தலைப்பிலும்,


காலை 9:30 முதல் 12:30 மணி வரை  சகோ. M.S.சுலைமான் அவர்கள்,  தடுமாறுவதும்தடம்மாறுவதும் எனும் தலைப்பிலும்,
 














மாலை 2:45 முதல் 4:30 மணி வரை சகோ. கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்நமது இலக்கு  எனும் தலைப்பிலும் நமக்கு அவசியமான தகவல்களை கொண்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.



கிளை நிர்வாகிகள் , மாவட்ட பேச்சாளர்கள், மற்றும் ஜமாஅத்தின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்



Wednesday, 27 March 2019

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.03.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் காங்கயம் ரோடு CTC அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட்த்தில் மாநில பேச்சாளர் சகோதரர். கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களை காம வெறியர்கள் சிலர் காதல் என்ற பெயரில் தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து, அடித்துத் துன்புறுத்தி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவை வைத்து அப்பெண்களை மிரட்டிப் பணம் பறித்ததுடன் அதை வைத்தே அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாத காரணத்தினால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்ற பாலியல் கொடூரம் இனியும் நிகழாது இருக்க வேண்டுமென்றால் இதில் தொடர்புடையவர்கள், இதன் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை பார்த்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் கயவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்பட வேண்டும்.

இவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.



மாவட்ட துணைச்செயலாளர் சேக்பரீத் நன்றியுரை ஆற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பெரிய தோட்டம் குமார்

அலை அலையாக இஸ்லாத்தை நோக்கி...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் 20-3-2019 அன்று குமார் என்கிற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். 

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 21 March 2019

வடுகன்காளிபாளையம் கிளையின் பொதுக்குழு 20-3-2019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் பொதுக்குழு 20-3-2019 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் மாவட்ட து.செயலாளர் சகோ.சேக்பரீத் மாவட்ட துணை தலைவர் சகோ.யாஸர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588

கிளை செயலாளர் - யூசுப் - 7708662102 

கிளை பொருளாளர் - இஸ்மாயில் - 6381678934

கிளை துணைத் தலைவர்  - அப்துல் மாலிக் - 9952722404

கிளை துணை செயலாளர் - சுல்தான் - 9788828961

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 17 March 2019

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ,
15.03.2019 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6:30 மணி முதல் தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்கள் *இஸ்லாமிய குடும்பம்* எனும் தலைப்பிலும்,

சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் *சீரழியும் இளைஞர்களை சீர்திருத்தும் இஸ்லாம்* எனும் தலைப்பிலும்,உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்



Saturday, 9 March 2019

மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாராந்திர மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 08/03/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்ஷாஅல்லாஹ் வரும் 31/03/2019 அன்று நடத்தவுள்ள மாவட்ட தர்பியா நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்துவது பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
மேலும் வருங்கால தாவா பணிகள் நிர்வாக பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 4 March 2019

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ரிஷி _திருப்பூர் மாவட்டம்


அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸில் 3/3/2019 அன்று திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சார்ந்த சகோதரர் ரிஷி அவர்கள் நேரில் வந்து தனது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை ரபி என்றும் மாற்றிக் கொண்டார்.
இஸ்லாம் பற்றி பல்வேறு விளக்கங்களை ஆர்வமுடன் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் அவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட செயற்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 03/03/2019 ஞாயிறு காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அனைத்து கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு வருங்காலத்தில் நமது தாவா செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்துக் கொள்ளலாம் என்று கருத்துக்கள், ஆலோசனைகள், வழங்கினார்கள்.
இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு ஆலோசனைகள், மற்றும் மக்களின் கருத்துக்களுக்கு விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 1 March 2019

மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை

கூட்டம் 01/03/2019 அன்று 


மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு, மாவட்ட தர்பியா பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்வுகள் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

மேலும் தாவா பணிகள்  நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 February 2019

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு -திருப்பூர் மாவட்ட

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியதோட்டம் கிளை  நிர்வாக சந்திப்பு  24/02/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மர்கஸ் இடப்பற்றாக்குறை பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்வுகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தாவா பணிகள்  நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் 24/02/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த வார தாவா மற்றும் நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்