Tuesday, 7 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - உடுமலை கிளை ....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.10.14 அன்று திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. A. முஹம்மது சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - எஸ்.வி. காலனி சார்பாக....

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 60-09-14 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் திடலில் தொழுகை நடைப்பெற்றது. இதில், சகோ. தவ்ஃபீக் (D.I.Sc) அவர்கள் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்லில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக .6-10-2014 அன்று திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

15_பெருநாள் தொழுகை போஸ்டர்கள் - நல்லூர் கிளை ....

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 04.10.14 அன்று மாவட்டம் சார்பாக நடைபெறும் திடலில் தொழுகை குறித்து மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

திடலில் தொழுகை குறித்து நோட்டிஸ் - எம்.எஸ்.நகர் கிளை..

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 05-10-14 அன்று. நபி வழியில் திடலில் தொழுகை சம்பந்தமாக 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 05.10.14  அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி அவர்கள் "ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

30 _ ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர்கள் - பெரிய கடை வீதி கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 03.10.14 அன்று உலக ஜோதிடர்களுக்கு சவால் விடும் போஸ்டர் மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

140 _ உணர்வு பேப்பர்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 03/10/14 அன்று 140 உணர்வு வார பத்திரிக்கைகள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

25 _ திடல் தொழுகை போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 4/10/14 அன்று மாவட்டம் சார்பாக நடத்தப்படும் திடல் தொழுகை பற்றி போஸ்டர் மொத்தம் 25 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 04-10-14 அன்று செந்தில் எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக புக் ஸ்டால்....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 03/10/14 அன்று புக் ஸ்டால் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் மார்க்க விளக்க புத்தகங்கள் மற்றம் CD, DVD க்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

25 உணர்வு பேப்பர்கள் விற்பனை - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-10-14 அன்று ஜூம்ஆவிற்கு பிறகு 25 உணர்வுகள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

20_ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர் - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 01/10/14 அன்று உலக சோதிடர்களுக்கு அறை கூவல் என்ற தலைப்பில் மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 4 October 2014

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு _ 04.10.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 04.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் அரஃபா நோன்பு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று ஜுமுஆவிற்குப் பிறகு 20 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ஜனாஸா பயிற்சி வகுப்பு - ஜி.கே கார்டன் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் ஜி.கே கார்டன் கிளை சார்பாக கடந்த 01.10.14 அன்று ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரரி குர்ஷித் ஆலிமா அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார். இதில், 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 02.10.14     அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. செய்யது அலி அவர்கள் "நபிகள் நாயகத்திற்கு சூனியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

பிற மத தாஃவா - ஊத்துக்குளி கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், சகோ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபி(ஸல்), இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய 3 புத்தகங்கள் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நோட்டீஸ் விநியோகம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 03.09.14 அன்று ஜுமுஆவிற்குப் பிறகு குர்பானி சட்டங்கள் குறித்து மொத்தம் 1500 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.. 

6_ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர் - பல்லடம் கிளை..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று ஜோதிடக்காரர்களுக்கு சவால் விடும் போஸ்டர் மொத்தம் 6 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-10-14 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "அழிவு நாள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

5_முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - பல்லடம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று அல்காயிதா இயக்கத்திற்கு எதிராக இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் போஸ்டர் மொத்தம் 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

ஸ்டிக்கர் தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 02-10-14 அன்று இரத்த தானம் சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் அடங்கிய பெரிய அளவிலான 160 ஸ்டிக்கர்கள் பொது இடங்களில் வாகனங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று இரண்டு இடங்களில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு கரும்பலகை தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...