Tuesday 4 October 2016

**ஹவுசிங் யூனிட் ** புதிய கிளை உருவாக்கம் - திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக கிளைகள் இல்லாத பகுதிகளில் கிளைகள் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஹவுசிங் யூனிட் பகுதியில் கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் உள்ள மக்களை ஒன்றிணைத்து சகோதரர் ஒருவர் வீட்டு மாடியில் வைத்து தொடர் குர்ஆன் வகுப்பு, வாரந்திர பெண்கள் பயான், தெருமுனைப் பிரச்சாரம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு கிளை அமைத்து விடலாம் என்ற சூழல் ஏற்பட்டதாலும்,அப்பகுதியில் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு பணிகளை வீரிய படுத்தும் முகமாகவும்...

இன்று (27/09/2016) காலை பஜ்ர் தொழுகைக்கு பின்

 மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது ஹுசைன் மாவட்ட துணை செயலாளர்
சகோ. அலாவுதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர்
சகோ. ஷாஹிது ஒலி ஆகியோர் ஹவுசிங் யூனிட் பகுதியில்  உள்ள சகோதரர்களை ஒருங்கிணைத்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாக வழிமுறைகளையும்,தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் பணிகளை குறித்தும் ஏகத்துவத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கி புதிய கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முதற்கட்டமாக 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கிளை கண்காணிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் பிறகு முழுமையான நிர்வாகம் போடப்படும் என்றும், மாநாட்டு பணிகளில் வீரியம் காட்ட வேண்டும் என்றும், நம்மை பன்படுத்தும் தர்பியாக்கள் அதிகமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது.

ஹவுசிங் யூனிட் கிளை பொறுப்பாளர்கள்

1.ஹுஸைன்
2.ஹாரிஸ்
3.முஹம்மது யூசுப்

-திருப்பூர் மாவட்டம்