Monday 16 June 2014

ரமலான் மாதத்தின் சிறப்புகள்" 50நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.06.14 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 40 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13.06.2014 ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  80  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"மது புகை நமக்கு பகை" _மங்கலம் கிளை போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பில் 13.06.2014 அன்று "மது புகை நமக்கு பகை" என்ற தலைப்பில் (திருகுர்ஆன் வசனம் கொண்ட) போஸ்டர் 50 நகரெங்கும் ஒட்டப்பட்டது.

"அல்லாஹ் இயலாதவனா?" _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 16.06.2014 அன்று  சகோ.இஸ்மாயில்  அவர்கள் "அல்லாஹ் இயலாதவனா?"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

7 நபர்களிடமிருந்த இணை வைப்பு பொருள்கள் அகற்றம் _ பெரியதோட்டம்கிளை ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்



    

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம்கிளை யின் சார்பாக  15.06.2014  அன்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. 

பெரியதோட்டம் கிளை சகோதரர்கள்  ஒவ்வொரு வீடு வீடாக சென்று தஃவா செய்து 7 நபர்களிடமிருந்த இணை வைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது....

"இஸ்லாமியர்களின் இன்றைய நிலை!" _ யாசின் பாபு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 15.06.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. ஷிகாபுதீன் அவர்கள் "இஸ்லாமியர்களின் இன்றைய நிலை!" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

வடுகன்காளி பாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1300/= நிதிஉதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 15.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளி பாளையம்  கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.1300/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"எழுதமுடியாத அல்லாஹுவின் வார்த்தைகள் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 16.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "எழுதமுடியாத அல்லாஹுவின் வார்த்தைகள் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்

அல்லாஹ்வின் வார்த்தைகள் – கலிமாத்துல்லாஹ் – என்ற சொல் திருக்குர்ஆனில் நான்கு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன்
முந்தைய வேதங்கள்
லவ்ஹூல் மஹ்ஃபூல் எனும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவை
ஒவ்வொரு விநாடியும் அல்லாஹ்விடமிருந்து புறப்பட்டு வரும் கோடிக்கணக்கான கட்டளைகள்
நான்காவது பொருள் தரக்கூடிய வசனங்களில் கலிமாத்துல்லாஹ் என்பதற்கு வார்த்தைகள் என்று பொருள் செய்யாமல் கட்டளைகள் என்று மொழிபெயர்த்துள்ளோம்.
6:115, 8:7, 10:64, 10:82, 18:109, 31:27, 42:24 ஆகியன அந்த வசனங்களாகும்.
திருக்குர்ஆன் 18:109, 31:27 வசனங்களில் "அல்லாஹ்வின் வார்த்தைகளை எழுத கடல் நீர் அளவுக்கு "மை' இருந்தாலும், அது போல் இன்னும் ஏழு கடல்கள் அளவுக்கு மை இருந்தாலும் போதாது'' எனக் கூறப்படுகிறது. இவ்வசனங்களைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர். அதாவது, திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிட கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும் எழுதி முடியாது என்பது அவர்களின் விளக்கம்.
இவ்விளக்கம் முற்றிலும் தவறாகும். திருமறைக் குர்ஆனை மக்கள் விளங்குவதற்கு எளிதாக இறைவன் ஆக்கியிருக்கிறான். கடல் நீர் அளவுக்கு உள்ள மைகளால் எழுதுமளவுக்கு குர்ஆனை இறைவன் கடினமானதாக வழங்கவில்லை.
ஒவ்வொரு விநாடி நேரத்திலும் இறைவனிடமிருந்து புறப்படுகின்ற கோடிக்கணக்கான கட்டளைகளே இங்கே இறைவனின் வார்த்தைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
ஒரு விநாடி நேரத்தில் ஒரே ஒரு மனிதனுக்கு இடப்படுகின்ற கட்டளைகளே பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவனுடைய ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கம், உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கம், உள்ளுறுப்புகளின் இயக்கம் என கோடிக்கணக்கான இயக்கங்கள் ஒரு மனிதனிடம் ஒரு விநாடி நேரத்தில் நடக்கின்றன. இதற்கான கட்டளைகள் யாவும் இறைவனிடமிருந்து தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளன.
ஒரு மனிதனுக்கு ஒரு விநாடி நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றால் அகிலத்தில் நடைபெறுகின்ற கோடானுகோடி நிகழ்வுகளுக்கு இறைவன் பிறப்பிக்கின்ற கட்டளைகளை எழுதுவதாக இருந்தால் உண்மையிலேயே ஏழு கடல்கள் மையாக இருந்தாலும் போதாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

"ரமலானின் சிறப்பு" _காங்கயம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பாக 15.06.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ.ராஜா அவர்கள் "ரமலானின் சிறப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

மகேஸ்வரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _ நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 15.06.2014 அன்று பிறமத சகோதரர்.மகேஸ்வரன்  அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பழனி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _ நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 15.06.2014 அன்று பிறமத சகோதரர்.பழனி அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.