Tuesday 16 July 2013

அழைப்புப்பணி _காலேஜ் ரோடு கிளை பெண்களுக்கான தர்பியா வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 16.07.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில் பெண்களுக்கான   தர்பியா வகுப்பு நடைபெற்றது. அதில் சகோதரி.கோவை சமீனா அவர்கள்  "அழைப்புப்பணி  " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்.

மங்கலம் கிளை தொடர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 14-07-2013 அன்று லுஹர் தொழுகைக்கு பின் தொடர்பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள்  உறவை பேணுவோம் என்ற தலைப்பிலும், சகோதரி இர்ஃபானா அவர்கள் இறையச்சம் உடையவர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி சுமையா அவர்கள்  பெண்ணுரிமை காக்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 

கிரிமினல்கள் ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா ?????

கேள்வி : 
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைக்குமா? 










பதில் : 

உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகள் வழங்கியுள்ளது. அதில் ஒரு தீர்ப்பை நாம் வரவேற்கலாம். இன்னொரு தீர்ப்பு நியாயமற்றதாக உள்ளது. அதை நாம் வரவேற்க முடியாது. ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் உடனே அவர் பதவி இழக்க வேண்டும் என்ற தீர்ப்பை நாம் வரவேற்க முடியும். இது குறித்து தனி கட்டுரை இடம் பெற்றுள்ளது. 

ஆனால் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது என்றும். ஓட்டுப் போட உரிமை இல்லாதவர்கள் போட்டியிடக் கூடாது என்றும் அளிக்கப்பட்ட தீர்ப்பை நாம் வரவேற்க முடியாது. 
மக்கள் பிரதிநிதித்துவ
சட்டம் பிரிவு4 மற்றும்5-ன் படி வாக்களிக்க தகுதி பெற்ற ஒருவர்தான் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதி படைத்தவர்கள் என்கிறது. அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5)பிரிவின்படி தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களும், விசாரணைக் கைதிகளும் தேர்தலில் ஓட்டுப்போட முடியாது. எனவே வாக்களிக்கும் தகுதியை இழந்த நபர் தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகளும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிபதிகள் பட்நாயக், முகோபாதியா கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முற்றிலும் தவறாகும். இது கிரிமினல்களை ஒழிப்பதற்குப் பதிலாக அப்பாவிகளை கிரிமினல்களாக ஆக்கவே உதவும். போலீசார் எத்தனையோ அப்பாவி மக்களைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்படுன்றனர். பல வருடங்கள் சிறைவாசம் முடிந்த பின் இவர்க நிரபராதிகள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இவர்களைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தீர்ப்பளித்தால் இது மாபெரும் அநீதி என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை? தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு என பல வழக்குகளைப் போட்டு நீதிமன்றக் காவலில் அரசாங்கத்தால் வைக்க முடியும். அவர்களை இதன் காரணமாக போட்டியிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்? ஒருவர் கிரிமினலா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். போலீசார் முடிவு செய்யக் கூடாது என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை? விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்று சட்டம் உள்ளதால் ஓட்டுப் போடாதவர்கள் எப்படி தேர்தலில் போட்டி இடலாம் என்று நீதிபதிகள் கேட்பது அவர்களின் சிந்தனைக் கோளாறுக்கு ஆதாரமாக உள்ளது. விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்ற சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அதைத் தான் நீதிமன்றம் தடுத்து இருக்க வேண்டும். நீதிமன்றங்கள் குற்றவாளி என்று முடிவு சொல்வதற்கு முன்னால் அரசாங்கம் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளதால் விசாரணைக் கைதிகள் ஓட்டும் போடலாம். போட்டியும் இடலாம் என்று தீர்ப்பளிப்பதுதான் அரசியல் சட்டத்துக்கு நெருக்கமானதாக இருக்கும். இலாவிட்டால் ஒரு அரசாங்கம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விசாரணக் கைதியாக்கி தேர்தலில் ஓட்டுப் போடுவதை தடுக்க முடியும். அதைக் காரணம் காட்டி அவர் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க முடியும். இந்த அநியாயத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று காரணம் சொல்லி அந்தச் சட்ட்த்தை திருத்தச் சொல்லும் நீதிமன்றம் அதே காரணத்தை இந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளவில்லை. சட்டப்படி ஒருவன் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் முன் அவன் நிரபராதி என்பது தான் உலகம் முழுவதும் உள்ள நீதியாகும். நீதிமன்றங்கள் விசாரணை செய்து குற்றவாளி என்று அறிவிக்காமல் இருக்கும் போது அவன் குற்றவாளி என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறினால் அதைத் தான் திருத்த வேண்டும். விசாரணைக் கைதிகள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர். எனவே அவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிப்பதுதான் சரியானதாக இருக்கும். முரண்பாடு இல்லாத தீர்ப்பாக இருக்க முடியும். இரு தீர்ப்புகளுக்கும் இரு வேறு அளவு கோலைப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கிரிமினல்களாக ஆக்கும் இந்தத் தீர்ப்பு கட்டாயம் மாற்றப்பட வேண்டும்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/unarvuweekly/cimilnalkalin_athikathai_neethimnara_theerpu_matruma/
Copyright © www.onlinepj.com

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை!
எதிரிகளால் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம்!! 

பெண்களைப் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தடுக்க குட்டைப்பாவாடை மற்றும் உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய லெகின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு பெய்ஜிங்கில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கின. அந்தப் புகார்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், புகார்கள் குறைந்தபாடில்லை. அந்தப் புகார்களைப் பெற்றுக்கொண்ட காவல்துறை பெண்கள் அதிக அளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான

உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே சீனப் பெண்களுக்கு சீனப் போலீசார் விடுத்த எச்சரிக்கை. பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் இருக்க குட்டைப்பாவாடை, உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் உடைகள், மார்பு தெரியும் பனியன்கள், உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கின்ஸ் பேன்ட் போன்றவற்றை அணியக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசுப்பேருந்துகள் பாதியளவுக்கு உயரமாகவும் இன்னொரு பாதி தாழ்வாகவும் அமைந்துள்ளன. உயரமான பகுதியில் பெண்கள் அமரும் தாழ்வான பகுதியில் உள்ள ஆண்கள் பெண்களின் தொடைகளையும் அதைத் தாண்டியும் செல்போனில் படம் எடுக்கின்றனர். பார்த்து ரசிக்கின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக அரசுப் பேருந்துகளில் உயரமாக உள்ள பேருந்தின் பின்புறத்தில் பெண்கள் அமரக் கூடாது; தாழ்வாக உள்ள முன்புறத்தில் தான் அமர வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. இதே போல மாடிப் பேருந்துகளில் உள்படியில் நிற்கும் பெண்களை கீழ்தளப்பேருந்தில் இருந்து ஆபாசமாக செல்போனில் படம் பிடிப்பபதைத் தவிர்க்க உள்படியில் பெண்கள் நிற்க்க் கூடாது எனவும் சீன காவல்துறை எச்சரித்துள்ளது. இதைப் பிரசுரமாக அச்சிட்டு பேருந்துகளிலும், பொது இடங்களிலும் ஒட்டி உள்ளனர். அரைகுறை ஆடை அணிந்து செல்லும் பெண்களை தவறான முறையில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க தங்கள் உடல்களை பெண்கள் அவரவர் கொண்டு செல்லும் பத்திரிகைகள் மற்றும் கைப்பைகளை வைத்து மறைத்துக் கொள்ளுமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுபோல ஆஸ்திரேலியாவில் குட்டைப்பாவாடை அணிந்து சென்ற மாணவிகள் பேருந்தில் ஏறுவதை பேருந்துப் படிகளில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த பேருந்து ஓட்டுநரை ஆஸ்திரேலியப் போலீசார் கைது செய்து வழக்குத்தொடர்ந்து அவருக்கு 7மாத சிறைத்தண்டனை கொடுத்த சம்பவமும் சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல "அரியானாவில், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணியத் தடை விதிக்க வேண்டும்' என, மாநிலக் கல்விக் குழு அதிகாரியை, அம்மாநிலத்தின் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டது. திருமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தவும் ஜீன்ஸ் அணியவும் தடைவிதிக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்திய சம்பவமும் சென்ற வாரம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத்திற்கு முன் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அனுமதிக்கக் கூடாது என மத்தியப் பிரதேச பா.ஜ.க. துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா கடந்த வாரம் மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். மாணவர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாலேயே பெரும்பாலான அச்சுறுத்தல்களும், குற்றங்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். அவருக்கு கண்டனக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் பறந்தன. பெண்கள் கவர்ச்சி ஆடை அணிவது கூடாது; அதனால் ஆண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து மோலோங்கியதோடு மட்டுமல்லாமல் ஜவுளிக்கடையில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகளுக்குக்கூட கவர்ச்சி ஆடை அணிவித்து ஆடவர்கள் கண்களில் படுமாறு வைக்க எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

மும்பை மாநகராட்சியின், 121வது வார்டு உறுப்பினர், ரிது தாவ்டே (39). பாரதிய, ஜனதாவைச் சேர்ந்த இவர், செல்லும் பாதையில், பெண் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். துணிக் கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளில், பெண் பொம்மைகளை வைத்திருப்பதைப் பார்ப்பதால், ஆண்களிடம் பாலியல் வக்கிரம் வெளிப்படுகிறது. எனவே, உள்ளாடை விற்பனை கடைகளில் வைக்கப்பட்டிருக்கும், பெண் பொம்மைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சியில் இவர் மற்றும் 227 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.


இதுகுறித்து, ரிது தாவ்டே கூறியதாவது: பெண்களின் உள்ளாடை விற்பனைக்காக, கடைக்காரர்கள், இத்தகைய பொம்மைகளை, தங்கள் கடைகளின் வெளிப்புறமாக வைக்கின்றனர். அதில், பிரா, ஜட்டியுடன் காட்சியளிக்கும் பொம்மைகளைப் பார்க்கும் ஆண்கள், அவற்றை பொம்மைகளாகப் பார்ப்பதில்லை; பெண்களாகவே பார்க்கின்றனர். இதனால், நல்ல எண்ணம் கொண்ட ஆண்களுக்கும், வக்கிர புத்தி ஏற்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த, ஆண், பெண் என, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில், இத்தகைய கவர்ச்சி பொம்மைகள் வைத்திருப்பது, நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்திற்கு எதிரானது. எனவே, அவற்றை அகற்றுவது என்ற முடிவை எடுத்தேன். தீர்மானம் : நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய பொம்மைகள், பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும் என்பது என் எண்ணம். எனவே, நாடு முழுவதும், பெண்கள் கவர்ச்சி பொம்மைக்கு தடை விதிக்க வேண்டும் அவர் கூறினார். மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? பெண்களுக்கு எதிரான தொல்லைகள் அதிகமாவதற்கு அவர்களது ஆடைக் கலாச்சாரம்தான் காரணம். அவர்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்தால் அதுவே அவர்களுக்கு சரியான பாதுகாப்பு என்று இஸ்லாம் சொல்லக்கூடிய கட்டளைகளைக் கடைப்பிடிக்காததே அதற்கு முழுமுதற்காரணம். இந்தக்கருத்தை இஸ்லாம் கூறும் கட்டளையாகச் சொன்னபோது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது; அவர்களைச் சித்ரவதை செய்கின்றது; பெண்களை பர்தா அணியச் சொல்லும் இவர்கள் பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள்; காட்டுமிராண்டிகள் என்று கதையளந்தனர் இஸ்லாமிய எதிரிகள். ஆனால் தற்போது நிலை என்ன? யார் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டார்களோ அந்த  

முற்போக்கு(?)வாதிகளது வாயிலிருந்தே இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை அல்லாஹ் வழிமொழிய வைத்துள்ளான்.

சீனக் காவல்துறை இந்தச் சட்டத்தை கொண்டுவரும் என்று யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இஸ்லாத்தை இழிவுபடுத்துவதையே முழுமுதற் குறிக்கோளாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வினரது வாயிலிருந்தே பர்தாவின் அவசியத்தை இறைவன் விளங்க வைத்துள்ளான். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகுதான் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதற்கு அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்பதை இப்போதுதான் மிகவும் காலம் தாழ்ந்து ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர்.

 இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர் ஆன் தெளிவுபடுத்தியுள்ளதைப் பாருங்கள் : 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/-/chinavil_kuttaipavadaiku_thadai/
Copyright © www.onlinepj.com