Monday 18 August 2014

மது ஒழிப்புப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக கடந்த 18.08.14 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மது ஒழிப்புப் பிரச்சாரம் நடைபெற்றது.

மதுவினால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.



மது குறித்த வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் மதுவீனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து 30 பதாகைகள் ஏந்தியவாறு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  



மேலும் மதுவை பற்றிய மொத்தம் 2000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மதுவை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது. 

இவ்வாறு மொத்தம் மூன்று இடங்களில் நடைபெற்றது. இதற்கு மக்கள் மத்தியில் மிகந்த வரவேற்பு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்....


நிகழ்ச்சிப் பற்றிய விபரம் :

1. அறிவொளி நகர் மெயின் ரோடு

உரை : சகோ.அஹ்மது கபீர் 

2. புதூர் பிரிவு 

உரை : சகோ.பஷீர் அலீ

3. கோம்பைத் தோட்டம் மெயின் வீதி

உரை : சகோ. சதாம் உசேன்