Monday 21 July 2014

பெருநாள் தொழுகை நடைபெறும் திடல்கள்......இன்ஷா அல்லாஹ்..


பிறமத தாஃவா _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 19.07.2014  அன்று தேன்மொழி  எனும் பிறமத சகோதரிக்கு  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அந்த சகோதரியிடம் வழங்குவதற்காக,  மாமனிதர் நபிகள் நாயகம்  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ரமளான் இரவு பயான் _ மாவட்ட மர்கஸ் - 20.07.14



 திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட மர்கஸில் 20.07.2014 அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது. "மறந்து விட்டேன்" எனும் தலைப்பில் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ்   அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக   21.07.14  அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.சுலைமான்  அவர்கள் நபிமார்களிடம் பாகுபாடு இல்லை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆண்டியக்கவுண்டனூரில் ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 21.07.14  அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சிறிய அமல்கள் எனும் தலைப்பில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள்    புஹாரியில் 6177 மற்றும் முஸ்லிமில் 164 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக 19-07-14  அன்று, டிஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்மாவில் ரூ.1500 வசூல் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

லைலத்துல் கத்ர் பற்றி நோட்டீஸ் விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.07.14 அன்று பிற பள்ளிகளில் சென்று பொது மக்களிடம்  "லைலத்துல் கத்ர்"  எனும் தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன் கூடிய நோட்டீசுகள் 1000 விநியோகம் செய்யப்பட்டது ..