Thursday 17 January 2013

மவ்லித் ஓர் ஆய்வு _தெருமுனைபிரச்சாரம் _மங்கலம் _14012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 14-01-2013 அன்று காயிதேமில்லத் நகரில் மாலை 07:00 மணி 08:00 முதல் மணி வரை  தெருமுனை பயான் நடைபெற்றது. இதில்  சகோ தவ்ஃபிக் அவர்கள் மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இணைவைப்புக்கு எதிராக _கோம்பைதோட்டம் கிளை _16012013

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில்
16.01.2013 அன்று ,இணைவைப்பு காரியமான தாயத்து குறித்து  அந்த பகுதி மக்களிடம் தாவா செய்து 2 நபர்களிடம் இருந்த இணைவைப்பு தாயத்து,கயறுகள்  களற்றி எரியப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் !

"இஸ்லாத்திற்கு விரோதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு"

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வருடம் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்ப்பட்டு பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இஸ்லாமிய பெயர் வைத்துள்ள அமைப்புகள், கட்சிகள், ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தவிர)  அனைத்து இயக்கங்கள் ஒன்றிணைத்து மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து இஸ்லாமிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லி "இஸ்லாமிய கூட்டமைப்பு" என்று ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து களமிறங்கி  ( 1 ) ( 2 ) ( 3 ) பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அடிப்படை இன்றி அமைக்கப்பட்ட
இந்த கூட்டமைப்பினர் "இலவச திருமண திட்டம் "என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்து திருப்பூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் பேனர் வைத்து வசூல் செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில் ஏழை பெண்களுக்கு உதவுகிறோம் என சொல்லி,
வழங்க உள்ளதாக அவர்கள் கூறுவது .....
மணமகனுக்கு வரதட்சணையாக 2 பவுண் தங்கம் , சீர் வரிசையாக பாத்திரம்கள் , ஒருமாத உணவுப்பொருள்கள் என பட்டியல் நீளுகிறது .

இஸ்லாமிய திருமணம் என்றால் மணமகன் ,மணமகளுக்கு மஹர்வழங்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில்
இஸ்லாமிய சட்டதிற்க்கு மாற்றமாக மணமகனுக்கு வரதட்சிணை வழங்கி ,  மணமகளுக்குஉதவுகிறோம் .என்று இஸ்லாத்திற்கு விரோதமான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.

 இஸ்லாமிய அடிப்படையில் மக்களுக்கு உதவுதல் நன்மை என்று மக்களும் இந்த காரியதிற்கு தமது பொருளாதாரத்தை வழங்கினால்,
இறைவனின் கோபத்திற்கும்,பாவத்தையும் பெற்றுத்தரும் காரியமாக அமையும் என்பதை விளக்க  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் முடிவு செய்துள்ளது.

"மௌலிதுஓர் ஆய்வு " _தெருமுனை கூட்டம் __தாராபுரம் _13012013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 13.01.2013 அன்று தாராபுரம் ஜின்னா மைதானம் எனும் பகுதியில் தெருமுனை கூட்டம்     நடைபெற்றது.
சகோ.தாவூத் கைசர் அவர்கள் "மௌலிதுஓர் ஆய்வு " எனும் தலைப்பில், 


மௌலிது இஸ்லாத்தில் இல்லாத  காரியம் என்றும் , அதனை படிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் மறுமை வாழ்வில் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும்  தெளிவாக எடுத்து சொல்லி உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!