Wednesday 31 October 2018

மாவட்டத்தில் உள்ள மக்தப் மதரஸாக்களில் ஆய்வு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 29, 30/10/2018 ஆகிய இரு நாட்கள் மாவட்டத்தில் உள்ள மக்தப் மதரஸாக்களில் நேரில் ஆலோசனை வழங்கப்பட்டது.


மாவட்ட மதரஸாக்கள் பொறுப்பாளர் மாவட்ட. துணைத் தலைவர் சகோ யாசர் அவர்கள்,




மங்கலம், ரம்யா கார்டன், கோம்பைத் தோட்டம், வெங்கடேஷ்வரா நகர், பெரிய கடை வீதி, பெரிய தோட்டம்
ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மதரஸா களுக்கு நேரில் சென்று  மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்து, மதரஸா குறை நிறைகளை கேட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் தலைமை அறிவித்துள்ள திருக்குர்ஆன் மனனம், கிராத் போன்ற போட்டிகள் குறித்து விளக்கமளித்து மாணவர்கள் கலந்து கொள்ள ஆர்வமூட்டபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்தியன்நகர் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.10.2018. அன்று ஃபஜர் தொழுகைக்குபின். இந்தியன்நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக் பாரித் அவர்கள் நேரில் சென்று கிளை நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து,
தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாடு பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் கிளை சார்பில் சின்னவர் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட மதரசா பணிகளை பார்வையிட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 30 October 2018

*இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ்* _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி, 29/10/2018 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், அதிகாரிகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட தேசிய தன்னார்வ இரத்ததான நாள் நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவணி செயலாளர் சகோ.ஜாகிர் அவர்களை அழைத்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் .
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே ..

Monday 29 October 2018

பல்லடம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 28.10.18 ஞாயிற்று கிழமை அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைப்பெற்றது.  
சகோதரி ஹபீப் நிஷா அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக்ஸ்டால் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 28.10.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது

மேலும் பொதுமக்கள் குடிப்பதற்காக குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டது.

மங்கலம் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பொதுக்குழு 28/10/2018 மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட புதிய நிர்வாகத்தை  தேர்வு செய்தனர்.


தலைவர்: சிராஜுதீன் 9043730855
செயலாளர்: நஜீர்அஹ்மது  9944634040
பொருளாளர்: அப்பாஸ் 8883006316
து தலைவர் : குத்புதீன் 9245799253
துணைச்செயலாளர்: ராஜா 9894318061
மருத்துவரணி: தஸ்தகீர் 9965966638
தொண்டரணி : அபூதாலிப் 9843766322
மாணவரணி: இத்ரீஸ் 8072493091
வர்த்தகரணி: முஸ்தபா 9843330333
அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் -காலேஜ்ரோடு கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (28/10/2018) அன்று காலை.9.30.மணிமுதல் 12.30 மணிவரை கல்லம்பாளையம் பாலம் அருகில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டது .
அதில் ஆர்வமாக பார்வையிட்டு இஸ்லாம் பற்றி விளக்கம் கேட்ட மக்களுக்கு 30.புத்தகங்கள் ஒரு திருக்குர்ஆன் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

மண்டல செயற்குழு கூட்டம் - திருப்பூர்






திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயற்குழு கூட்டம் திருப்பூர் DRG ஹோட்டலில் 28/10/2018 அன்று காலை 10:30 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

மாநில செயலாளர்கள் Eபாரூக், CVஇம்ரான், செங்கோட்டை பைஸல் மற்றும் தரமணி யாஸிர் அவர்களும்
நமது திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மக்களிடம் எவ்வாறெல்லாம் திருக்குர்ஆனின் போதனைகளை கொண்டு செல்வது பற்றியும்,
மாநாட்டில் எவ்வாறெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது பற்றியும் பல்வேறு தலைப்புகளில்
தாயிக்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

கோம்பைத் தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/10/2018 அன்று பொதுக்குழு கூட்டம் 

மாவட்ட நிர்வாகிகள் யாசர் அரஃபாத் மா.து.தலைவர்,
ஷேக் பரீத் மா.து.செயலாளர், இம்ரான் கான் மா.மா.அணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக இம்ரான் கான் அவர்கள் துவக்க உறை நிகழ்த்தினார் அதைதொடர்ந்து கிளை செயலாளர் சல்மான் அவர்கள் கிளையின் செயல்பாடு அறிக்கை சமர்பித்தார் மேலும் பொருலாளர் ஷாஜகான் அவர்கள் கிளையின் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.

அதைதொடர்ந்து கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: பாபு +919043832610
செயலாளர்: அபுபக்கர் சித்திக் +919791972987
பொருலாளர்: ஷாஜகான் 9042979014
து.தலைவர்: முஹம்மது முஸ்தபா 7904899013
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
தொ.அணி செயலாளர் செய்யது முஷரஃப் +919003758870
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

மது, புகையின் தீமைகள் பற்றி இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 28/10/18, அன்று,

 மது, மற்றும் புகையினால், ஏற்ப்படும் பாதிப்புகளை மையப்படுத்தி தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில் செய்யப்பட்டது. 

இதில் சகோதரரர் சுஜாஅலி, அவர்கள்

 உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 27 October 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் - காலேஜ்ரோடு கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/10/2018 அன்று இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய ஜனவரி27 (2019) திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமான சுவர் விளம்பரம் மூன்று இடங்களில் சுமார் 800.ஸ்கொயர்பிட் அளவுக்கு எழுதப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாடு _ சுவர்விளம்பரம் -அலங்கியம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையில் 26-10-18- அன்று மனிதகுல வழிகாட்டி 
திருக்குர்ஆன் மாநில மாநாட்டின் சுவர் விளம்பரம் மக்கள் அதிகமாக கூடும் ஆறு இடங்களில் எழுதப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்



 
 

Friday 26 October 2018

மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் 
26/10/2018  அன்று மாவட்ட தலைவர் மர்கஸ் வளாகத்தில்  நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும் மாவட்ட பேச்சாளர் அபூபக்கர் சஆதி  அவர்கள் ஆகியோர் 

மக்தப் மதரஸா பாடத்திட்ட வழிகாட்டுதல்,

மதரஸா ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள், 
கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள் 

மேலும் திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும், 
செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday 24 October 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் - உடுமலைகிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24/10/2018 அன்று உடுமலை பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் நான்கு இடங்களில் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  R.P. நகர் கிளை  சார்பாக 24-10-2018 அன்று 1 யூனிட்   "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் சாய்னா என்ற   சகோதரிக்கு சிகிச்சைக்காக  திருப்பூர் அரசு  மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்