Thursday 14 August 2014

பெண்கள் குழு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 14.08.14  அன்று ஜூம்ஆ வின் அவசியம் பற்றி பெண்கள் குழுவாக சென்று அவர்கள் மூலம் குழு தாஃவா  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு ந்கர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.08.14  அன்று ஃபஜ்ருக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள், கவலையை தீர்க்கும் பெருங்கவலை    எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்  கிளை சார்பாக கடந்த 13.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.ஷிஹாபுத்தீன்  அவர்கள் ஈஸா நபி தூதரா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மத்திய அரசைக் கண்டித்து 30 போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 05.08.14 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் இருக்கும் எல்லா உறவுகளையும் முறித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக பழகுடோன் பகுதியில் கடந்த 12.08.14  அன்று தெருமுனை பிரச்சாரம்   நடத்தப்பட்டது. இதில், சகோ.ராஜா அவர்கள் மது ஒழிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...