Tuesday 18 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் _ VKP




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதலாவதாக மதரஸா மாணவ , மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறகு சகோ. அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? எதற்கு ? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு மாநாட்டிற்கான VKP  கிளையின் தாவா  பணிகளின் விபரங்கள்  மற்றும் வாகன ஏற்பாடுகள் , பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் கிளை நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள்

கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலாக கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

*மறுமை* -அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (16.12.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவராயம்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி அருகில் மற்றும் அடுத்த வீதியிலும் 2 இடங்களில் நடைபெற்றது. 
சகோ. இம்ரான் கான் அவர்கள் *மறுமை* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
 அல்ஹம்துலில்லாஹ்.

"பின்பற்ற தகுதிஉடையவர் யார்" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக17:12:18திங்கள் அன்று சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ:அப்துல்வஹாப் அவர்கள் "பின்பற்ற தகுதிஉடையவர் யார்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்