Wednesday 1 August 2018

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.. இந்தியன் நகர் கிளை மாலதி ஹஸ்னா வாக



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2018 அன்று மாலதி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹஸ்னா என மாற்றிக் கொண்டார்.

கிளை நிர்வாகம் சார்பாக அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர்விளம்பரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை









திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....
சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
22/07/2018 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.

கிரகண தொழுகை -அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக  27-7-18 அன்று ஏற்பட்ட சந்திர கிரகண த்தை தொடர்ந்து  கிரகண தொழுகை நடைபெற்றது.

திருக் குர்ஆன் மாநாடு ஏன்? _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 29:7:18 ஞாயிறு அஸருக்கு பின்  கடை வீதியில் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ: சேக் அப்துல்லாஹ் அவர்கள் " திருக் குர்ஆன் மாநாடு ஏன்? எனும் தலைப்பில் உரையாற்றினார்.
 அல்ஹம்துலில்லாஹ்

கிளை நிர்வாகிகள் சந்திப்பு - அலங்கியம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில்    29/07 /2018 அன்று மகரிப் தொழுகைக்கு  பிறகு  மாவட்ட நிர்வாகி  அப்துர் ரஷிது (மாவட்ட தலைவர்) அவர்கள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில் திருக்குர்ஆன் மாநாடு தாவா பணிகளை  வீரியமாக செய்வது சம்பந்தமாக ஆலோசனைகள், வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

தமிழரசுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 30-7-2018 அன்று
தமிழரசு என்ற பிறமத சகோதரர்க்கு இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள், மனிதகுல வழிகாட்டி
திருக்குர்ஆன் சம்பந்தமான விளக்கம் அளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

" முஸ்லீம் என்றால் யார்?" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 30:7:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ: இம்ரான் அவர்கள் " முஸ்லீம் என்றால் யார்?" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

" இறையச்சம் " -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 29-07-2018 அன்று மாலை  பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது 

இதில் சகோதரி சுமையா அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

திருகுர்ஆன் மாநாடு ஏன்? தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக
 29/7/18 ஞாயிறு அன்று மாலை  ஜின்னா மைதானம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

சகோதரர். அப்துல்லாஹ்(உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநாடு ஏன்? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்