Tuesday 24 June 2014

53 யூனிட் இரத்த தான முகாம்_ வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா   நகர்  கிளை  சார்பில் 22.06.2014 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை உடன் இணைந்து  இரத்த தான முகாம்  நடைபெற்றது. 


 


கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும்    ஆர்வமுடன் கலந்து கொண்டு    53    யூனிட்   இரத்தம்    தானம்  செய்தனர். 
அல்ஹம்துலில்லாஹ் ....

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் இரண்டாவது வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

"தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" _ 1000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  20.06.14 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட நாட்டில்  நடைபெறும் குண்டு வெடிப்பின் செய்தியை "தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" எனும் தலைப்பில்  நோட்டீஸ் அடித்து  பொது இடங்களிலும் கடை வீதிகளிலும் மற்றும்  ஜும்ஆ தினத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும்   1000  நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் முதல் வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

"புகை,மதுவின் தீமைகள்" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பாக    22.06.2014  அன்றுநகரின் முக்கிய இடமான ஜாமியா மஸ்ஜித் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சேக்பரீத்   அவர்கள் "புகை,மதுவின் தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய


ன்பெற்றனர்...

"இஸ்லாத்தில் இல்லாத 786" _யாசின் பாபு நகர் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 23.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத 786"  எனும் தலைப்பில் குழந்தைகளுக்கு பயான் நடத்தினார்கள். சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ரமலான்" _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 22.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷாபாமா அவர்கள் "ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்

கப்ரு எனும் மண்ணறை வாழ்கை" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 24.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "கப்ரு எனும் மண்ணறை வாழ்கை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மரண சாசனம்" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 24.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "மரண சாசனம்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 22.06.2014 அன்று  சகோ.சதாம்உசேன்  அவர்கள்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.