Wednesday 5 December 2012

மாபெரும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாம்-பெரியதோட்டம் கிளை





03.12.12 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக  கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடம் இணைந்து மாபெரும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாம் பெரியதோட்டம் 2 வது வீதியில் தாருல் ஹூதா அரபி பாடசாலையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் நடைப்பெற்றது.இதில் 160 பேர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மருத்துவ ஆலோசனையும்,புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து புகைப்படமும்,மாத்திரையும் (swingam) தரப்பட்டது.
பரிசோதனை முகாமில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இவருக்கு கட்டண சலுகை அடிப்படையில் மருத்துவ சிகிச்சை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.


                       
                                                        


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தலைமை தாங்கினார்கள்

POSTED BY
 

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கடந்த 02.12.12 அன்று காலை 10.45 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து மாநில செயளாலர்கள் சகோ.அப்துல் ஜப்பார் மற்றும் சகோ.திருவள்ளூர் யூசுப் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.இதில் கடந்த பொதுக்குழுவிலிருந்து இந்த பொதுக்குழு வரை மாவட்ட செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு கண்க்குகள் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் நிர்வாக சீரமைப்பு நடைப்பெற்றது.



POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக ”யார் இவர்? ”துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது-மங்கலம் கிளை

அல்லாஹ்வின் திருபெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக  03-12-2012 அன்று திங்கள் கிழமை அன்று யார் இவர்? என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு மாற்றுமத சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் மங்கலம் பேருந்து நிறுத்தத்திலும் விநியோகம் செய்யப்பட்டது




POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக பேனர் தாஃவா-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் மாணவர் அணியின் சார்பாக  01-12-2012 அன்று பல்லடம் கிளை, தாராபுரம் கிளை, உடுமலை கிளை, ஆகிய கிளைகளில் தொழுகைக்கு பின் ஓதும் துஆ பேனர்கள் அடித்து ஒட்டப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
பேனரின் அளவு (8*4)(8*4)(5*3)


POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக தெருமுனை பயான்-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 02-12-2012 அன்று சின்னவர் தோட்டத்தில் மாலை 07:00 மணி 08:00 முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மாணவர் அணியில் உள்ள சகோ யாசின் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்


POSTED BY