Thursday 19 May 2016

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்புர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 18-05-2016 அன்று  ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது..இதில் ** மூஸா நபி வரலாறு ** என்ற தலைப்பில் சகோ - ஷிஹாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகால பயிற்சி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 30  மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் சகோதரர் - முஹம்மது பிலால் அவர்கள்  "  மார்க்க கல்வியின் அவசியம் " என்ற தலைப்பிலும் சகோதரர் - முஹம்மது சலீம்  அவர்கள் ** குழந்தை வளர்ப்பு ** என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-05-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** சுவனம் இறைவனை அஞ்சுவோருக்கே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

கோடைகால பயிற்சி ** மதரசா ஆண்டு விழா - V.K.P கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் மதரஸா  ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 33 மாணவிகளுக்கு,மதரஸா மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  

சமுதாயப்பணி - G.K கார்டன் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன்  கிளையின் சார்பாக  17-05-2016  அன்று காலை 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் இலவசமாக மாணவ மாணவிகளுக்கு பிரிண்ட் அவுட் எடுத்து தரப்பட்டது.ஐம்பதுக்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பயன்பெற்றனர். ...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 17-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.சிராஜ்   அவர்கள் " யூசுப் நபியுடன் இருந்த இருவரின் கனவுகள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 16-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் " யூசுப் நபியின் பிரார்த்தனை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...