Friday 2 November 2018

மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி: _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக  இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கின்ற திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மதரஸா  மாணவ,மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் விதமாக வருகை மற்றும் நன்றாக ஓதுதல், மனனம் செய்தல் அடிப்படையில்  02/11/2018- அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

 அல்ஹம்துலில்லாஹ்

நில வேம்பு கசாயம் வினியோகம் _ தாராபுரம் கிளை மருத்துவ முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/10/18 வெள்ளிக்கிழமை அன்று வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் 5 மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் 200 மேற்பட்ட வீடுகளுக்கு சென்று 500 மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

ரம்யா கார்டன் மதரஷா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 2-11-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது 
அதில்  மாணவிகளின் மார்க்க கல்வி சம்பந்தமான பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மற்றும் சிறப்புரையாக அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குழந்தைகளின்  நல்லொழுக்கத்திற்கு பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை மருத்துவ உதவி:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 2/11/2018- அன்றைய ஜூம்ஆ வசூல் ரூபாய் 2000 செரங்காடு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பஷீர் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

சமூதாயதீமைகள் - GK கார்டன்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை சார்பில் 1-11-2018அன்று சாராதா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில்  சகோதரி சுலைஹா அவர்கள் சமூதாயதீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்   O POSITIVE   இரத்தம்  1 யூனிட்        நஸ்ரின்(24) என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக   அன்று  01-11-2018  அவசர  இரத்தத் தானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் கூறும் சான்றுகள் _மங்கலம்கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 1-11-2018அன்று கோல்டன்டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில் சகோதரி ஆபிலா அவர்கள் திருக்குர்ஆன் கூறும் சான்றுகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்