Saturday 31 December 2011

பெண்களுக்கான பேச்சு பயிற்சி 22112011




TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக பெண்களுக்கான பேச்சு பயிற்சி
வகுப்பு கடந்த 22.11.2011 அன்று நடைபெற்றது. இதில் 21 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் தௌஹீத் கல்லுரி முதல்வர் சகோ: M.I. சுலைமான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
posted by SM.YOUSUF

மருத்துவ உதவி




விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்
சகோ சிராஜுதீன் அவர்களின் மருத்துவ செலவினகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5 ஆயிரம் கடந்த 21-11-2011 அன்று வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

தவ்ஹீத் நூலகம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில்
கடந்த 22-11-2011 தவ்ஹீத் நூலகம் திறக்கப்பட்டது. இதில் புத்தகம் மற்றும் ஹதீஸ் நூல்கள் இடம் பெற்றுள்ளது.
posted by SM.YOUSUF

பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கோல்டன் டவர் கிளை கடந்த 21-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஃபீக் அவர்கள் அழைப்பு பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

posted by SM.YOUSUF

நல்லொழுக்க பயிற்சி முகாம் 20-11-2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் எம்.எஸ் நகர் கிளையில் கடந்த 20-11-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் அப்துல்லாஹ் அவர்கள் கொள்கை உறுது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,

posted by SM.YOUSUF

நிவாரண உதவி


திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளி நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் உடுமலை கிளை சார்பாக ரூபாய் 31,200 கடந்த 11-11-11 அன்று மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

posted by SM.YOUSUF

மருத்துவ முகாம் _13.11.2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 13.11.2011 ஞாயிறு அன்று மாபெரும் இலவச எலும்பு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் 250 நபர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ். இதில் கலந்து கொண்டவர்களுக்கு 2000 ரூ மதிப்புள்ள நரம்பு மற்றும் எலும்பு வலிமை கண்டறியும் சோதனை இலவசமாக செய்யப்பட்டது.
மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவினாசி MLA கருப்பசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
posted by SM.YOUSUF

Saturday 24 December 2011

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தினமலர் 22-12-2011 செய்தி
இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.


posted by SM.YOUSUF

Saturday 10 December 2011

தினமலரின் விஷமத்தனமும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் துடிப்பான செயல்பாடும்



ஊடக பயங்கரவாதமும் பார்ப்பனிய பாசிச வெறியும் கொண்ட தினமலர் நாளிதழ் எவ்வளவு தான் குட்டுப்பட்டாலும், தனது உண்மை முகத்தை, சுய ருபத்தை அடிக்கடி வெளிக்காட்டத் தவறுவதில்லை, உண்மையின் உரைகல் என்று முகப்பில் பெயர் (மட்டும்) தாங்கி வந்து கொண்டிருக்கும் இந் நாளிதழ் கடந்த 7-12-2011 புதன்னறு சென்னை பதிப்பில் வெளிவந்த செய்தியொன்று தமிழ் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அரைகுறைகள் கொண்டாடிய முகரம் பண்டிகையை செய்தியாக வெளியிடுகிறோம் என்ரெண்ணி அனைத்து முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது. முகரம் பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கமாக அசன்(ரலி), உசேன் (ரலி) அவர்களின் மரணச் செய்தியை கேட்ட அவர்களுது தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் தீக்குளித்து இறந்ததின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது. செய்தி குழுமங்கள் வாயிலாக பரப்பப்பட்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருந்த நிலையில் நமது ஜமாத்தின் தம்மாம் மண்டல நிர்வாகிகள் தினமலரின் நிர்வாகி பாலா அவர்களைத் தொடர்பு கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ததுடன் தொடர்ந்து இது போல் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகள் வெளியிடுவது சமுக நல்லினக்கத்தை குலைக்கும் செயலாக உள்ளதை தெளிவுபடுத்தினர் அனைத்தையும் பொறுமையாக கேட்ட நாளிதழ் நிர்வாகி தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளிட்டதாகவும், உங்களது மத உணர்வுகளை மதிக்கிறோம். இச் செய்தியை உடனடியாக நிக்கிவிடுகிறோம் என்று சொல்லி 1 மணி நேரத்தில் இணைய தளத்திலிருந்து நிக்கினர் அல்ஹம்துலில்லாஹ்.
இத்தோடு சமிபத்தில் கேரளாவில் நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமாக இருக்கும் விஷமத்தனமாக நபிகள் நாயகத்தை அவமதித்து கல்லுரியில் வினாத்தாள் தயாரித்த ஜோசப் என்கிற பேராசிரியரின் கையைதுண்டித்த இயக்கத்தினர் நினைத்துப் பார்க்க வேண்டும். சத்திய மார்க்கத்தை அதன் தூய்மையான வழியில் எடுத்துச் சொல்லும் தமிழ்நாடு தவ்ஹித் ஜாமத்தின் சீரிய வழிகாட்டுதலின் படி செயல்படும் அடிமட்ட உறுப்பினர் கூட வன்முறையை கையில் எடுப்பதில்லை அவ்வளவு தெளிவான தலைமையின் வழிகாட்டுதல்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

posted by SM.YOUSUF

Tuesday 6 December 2011

கொள்கை சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்???



தயவு செய்து முழுமையாக படிக்கவும்........ அனைவருக்கும் எனது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு............ எனதருமை கொள்கை சகோதரர்களே! குடும்பங்கள் வாயிலாகவும், இயக்கங்கள்,மற்றும் சமுதாயரீதியகவும் பல எதிர்ப்புகள் வந்தாலும் தளர்ந்து விடாமல் ஏக இறைவனின் உதவியை கொண்டு அல்லாஹ்வுடைய இந்த சத்தியமார்க்கத்தை அதன் தூயவடிவில் மக்கள் மத்தியில் கட்டுரை வழியாகவும்,மார்க்க விளக்கக் கூட்டங்கள் மூலமாகவும் கொண்டு செல்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.... இவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை தவ்ஹீத்,தவ்ஹீத் என்று சொல்லிய நம்கொள்கை சகோதரர்கள் சிலர் தங்களுடைய திருமண விஷயத்தில் தன் தாய் சொல்கிறார் தம் தந்தை சொல்கிறார் என்று வரதச்சனை வாங்கி திருமணம் செய்து இந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து தடம் புரள்வதை நாம் அவ்வப்போது கண்டுவருகிறோம்.இவர்களைப் போன்றவர்களை புறந்தள்ளிவிடுவோம். காரணம் அவர்கள் அவர்கள் உள்ளத்தில் இந்த ஏகத்துவ கொள்கையை முழுவதுமாக நுழையவில்லை என்பதுதான். அல்லாஹ்வின் கிருபையினால் சிலர் தங்களுடைய திருமண விஷயத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் வரதட்சணை வாங்கமாட்டேன் என்றும்,மார்க்க அடிப்படையில்தான் மணப்பெண்ணை தேர்ந்தெடுப்பேன் என்றும், தாலி(கருஷமணி)கட்டுதல்,ஆலத்தி எடுத்தல்,பெண்வீட்டு விருந்து,நல்லநாள் பார்த்தல் இன்னும் இதுபோன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை நான் ஒருபோதும் என்னுடைய திருமணத்தில் செய்யமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்கள்.அதன்படி திருமணமும் செய்துள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!!! இதுபோன்று கொள்கையில் பிடிப்புள்ள சகோதரர்கள் மணப்பெண் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இன்னும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் தனது வீட்டில் திருமண பேச்சை எடுத்தவுடன் நம் சகோதரன் இஸ்லாமிய திருமணத்தை பற்றி தம் பெற்றோகளுக்கு எடுத்து சொல்கிறான்.உடனே பல எதிர்ப்புகள் வருகிறது. இவற்றை எல்லாம் சரிகட்டி ஒருவழியாக தன் தாய்,தந்தையரின் அனுமதியை பெறுகிறான். அப்போது அந்த தாய் சொல்லக்கொடிய பதில் உன்விருப்பப்படி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்.ஆனால், இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்று தம் குடும்பத்தில் உள்ள யாரையாவது சொல்கிறார். இதை கேட்டவுடன் நம் சகோதரன் கூறும் பதில் மணப்பெண் ஏகத்துவ கொள்கை உடையவளாக இருக்கவேண்டும் என்பதைத்தான். உடனே தன் பெற்றோரும் சரி பரவாயில்லை,நீ சொல்லும்படி இந்த பெண்ணை உன் கொள்கையை சொல்லகூடிய மதரசாவில் சேர்த்துவிடுகிறேன்.ஒருவருடம் அல்லது இரண்டுவருடம் கழித்து இந்த பெண்ணை திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார்கள். உடனே நம் சகோதரனும் அல்ஹம்துலில்லாஹ் இதுபோதும் என்று சொல்லிக்கொண்டு சம்மதித்து விடுகிறான். இவர்களைப்பார்த்து நான் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், தன் பெற்றோர் நம் விருப்பப்படி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள சம்மதத்தின் காரணத்தால் சரி என்று அந்த பெண்ணையும் மதரசாவில் சேர்த்து மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக மாற்றி திருமணம் செய்துகொள்கிறீர்கள்.நல்ல விசயம்தான். ஆனால் இதற்கு முன்பே இந்த ஏகத்துவ கொள்கையை ஏற்றுள்ள நம் சகோதரிகளின் நிலைமையையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் நான் திருமணம் முடித்தால் ஏகத்துவவாதியைத்தான் திருமணம் செய்வேன் இல்லையென்றால் அல்லாஹ்வின் பால் நோன்புநோற்று கன்னியாகவே இறப்பேன் என்று சொல்லி பெற்றோர்களையும்,குடும்பத்தில்லுள்ளவர்களையும் எதிர்த்துக் கொண்டு கொள்கையில் உறுதியாக உள்ள சகோதரிகளுக்கு அந்த வாழ்க்கையை கொடுப்பது ஏகத்துவ சிந்தனை உள்ள ஒவ்வொரு சகோதரனின் மீதும் கடைமையாகும். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கொள்கைபிடிப்புள்ள சகோதரிகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காமல் விட்டதால் எத்தனையோ சகோதரிகள் வேறுவழியின்றி ஷிர்க் வைக்கக்கொடிய,அல்லது மார்க்கப்பற்றில்லாத சகோதரனை திருமணம் முடித்துக்கொண்டு அவர்களுக்கும் எடுத்து சொல்ல முடியாமல் தானும் கடைபிடிக்க முடியாமல் கடைசியில் கணவன் எவ்வழியோ அவ்வழி என்று போய்விடுகிறார்கள். இதுக்கு நாம் காரணமாகி விடக்கூடாது........ ஆகையால் தயவு செய்து ஏற்கனவே கொள்கையை ஏற்றுள்ள சகோதரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திருமணம் செய்து அதன் மூலம் இன்னும் அதிகமான சகோதரிகளை இந்த ஏகத்துவ கொள்கையில் இணைய உதவி செய்யுங்கள்.அதுபோன்ற எண்ணமுடையவர்களாக எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆகி அருள்புரிவானாக!!!!!! ஆமீன்..........
posted by SM.YOUSUF

Monday 5 December 2011

நிரந்தர நரகை நோக்கிய பயணம்?



நிரந்தர நரகை நோக்கிய பயணம்?
கப்றும் வைபவங்களும்
==================
நபி (ஸல்) அவர்கள் தம் கப்றை பள்ளியாகத் திருப்பி விடாமலிருக்க (அதில் வைபவங்கள், கூடு, கொடிகள் எடுக்காமலிருக்கச் சொல்லியிருப்பதுடன்) தம் மரணத் தருவாயில் ‘யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்கள் தம் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கி விட்டார்கள்’ என்று கூறியதாக ராவி குறிப்பிடுகிறார். இவர்கள் செய்கின்ற இந்தச் செய்கையைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் ‘இறைவா! என்னுடைய கப்றை அனுஷ்டானங்கள் செலுத்தப்படும் பிம்பமாக ஆக்கி விடாதே! தம் நபிமார்களின் கப்றுகளில் பள்ளி வாசல்களைக் கட்டி வைத்திருக்கும் சில சமூகத்தார்கள் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது’ என்று இமாம் மாலிக் தம் முவத்தா என்ற நூலில் அறிவிக்கிறார்கள்.

இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘நபி ஈஸாவை கிறிஸ்தவர்கள் வரம்பு மீறித் துதித்தது போல என்னை நீங்கள் துதிக்காதீர்கள். நான் ஒரு அடிமை. எனவே என்னைப் பற்றி அல்லாஹ்வின் அடிமை என்றும், அவன் தூதர் என்றும் கூறுங்கள்’ என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘அல்லாஹ்வும், முஹம்மதும் நாடியவை நடக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியவை தான் நடக்கும் என்று கூறுங்கள். அல்லாஹ் நாடியதற்குப் பின்னர்தான் முஹம்மத் நாட முடியும்’.

காட்டரபிகளில் ஒருவர் நபிகளிடம் வந்து ‘நீங்களும், அல்லாஹ்வும் நாடியவை (நடந்தது)’ என்றார். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘என்னை அல்லாஹ்வுக்கு (நிகராக்கி) இணையாக்கி விட்டீர்களா? அல்லாஹ் நாடியது மட்டும் (நடந்தது) என்று கூறும்’. என்றார்கள்.

இதைப்பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்: “நீர் கூறும்! அல்லாஹ் நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறியக் கூடுமாயின் நன்மைகளையே அதிகம் தேடிக் கொண்டிருப்பேன். யாதொரு தீங்கும் என்னை அணுகியிராது”. (7:188)

மற்றொரு இடத்தில் இறைவன் கூறுகிறான்: “நீர் கூறும். அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ, தீமையோ நான் எனக்கே தேடிக் கொள்ள சக்தியற்றவன் (10:49). மேலும் கூறினான்: “நபியே! நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது. மாறாக அல்லாஹ் மட்டும் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்” (28:56). “நபியே! இவ்விஷயத்தில் உமக்கு யாதொரு அதிகாரமுமில்லை” (3;128)

இதுவே ஏகத்துவத்தின் உண்மை நிலை. அல்லாஹ்விடத்தில் மிக்க மதிப்பிற்கும், பெருமைக்கும், கண்ணியத்திற்குமுரிய நபி (ஸல்) அவர்களின் நிலைமை இப்படி என்றால் வேறு சிருஷ்டிகளின் நிலைமை எப்படி எப்படி என்பதை சிந்தித்திப் பார்க்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

posted by SM.YOUSUF

மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?


மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!? 
மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.

மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது.
(திருக்குர்ஆன் 2:219)

மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி : உணர்வு

posted by SM.YOUSUF

Thursday 24 November 2011

அல்லாஹ்வின் உதவியுடன் தனித்து களமிறங்கிய TNTJ



இறைவனின் திருபெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர,சகோதரிகளே!
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். விபரம்  இந்த பாதிப்பு ஏற்பட்டவுடன் திருப்பூர் பகுதியில் இருந்த அனைத்து அமைப்புகளும் களத்தில் இறங்கி வேலைகள் செய்தது எந்த ஒரு அமைப்பும் குறை சொல்ல இயலாத அளவு தங்களால் இயன்ற அளவு வேலைகளை செய்தனர்  எனபது குறிப்பிடத்தக்கது இந்த பெரும் வெள்ள விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு  அனைத்து ஜமாத்தும் இணைந்து அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது . 
இதில் குர்ஆன்,ஹதீஸ் சரியாக சொல்வதால் நம்மை அவர்கள் அழைக்கவில்லை. என்றாலும் நமது கொள்கைக்கும் உறுதிக்கும் அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருளால் பாதிக்கப்பட்ட மக்களை உடனுக்குடன் சென்று சந்தித்து அவர்களுக்கு உடன் 
தேவைப்பட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அண்ணாநகர் எனும் பகுதியில் சென்று அந்தப்பகுதியில் சேரும் சகதியுமாக இருந்த வீடுகள் முதற்கொண்டு சென்று சுத்தம் செய்யப்பட்டது. அவர்களுக்கு உணவு,தேனீர்,பிஸ்கட் போன்றவை புதன் இரவு வரை வழங்கப்பட்டது மேலும்

Tuesday 15 November 2011

திருப்பூரில் வெள்ளம் – நிவாரணப்பணியில் திருப்பூர் TNTJ

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதார அடிப்படை வசதிகூட இல்லாமல் அரசின் எவ்வித உதவியும் கிடைக்காமலும் கடும் பாதிப்புக்குள்ளார்கள்கள். சத்யா நகர், சுகுமார் நகர் ,பெரியதோட்டம் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் சேறும் சகதியுமாக தேங்கி நின்றன.
மக்களின் கடும் பாதிப்பைக் கண்ட திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 நாட்களும் எவ்வித அடிப்படை வசதியும் உணவும் இல்லாமல் தவித்த அந்த மக்களுக்கு உணவு, குடிநீர்,தேனீர் போன்றவைகளை வழங்கி சேவையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து  அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கப்பட்டது . அதுமட்டுமின்றி பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது .
மேலும் வெள்ளித்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்கள் ஏதும் வராமல் இருக்க அதற்குரிய தடுப்பூசிகள் போடப்பட்டது.

Saturday 29 October 2011

”முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று மாலை 06:30மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் குழந்தைகள் மதரசாவில் பயிலும் மாணவி முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் என்ற தலைப்பிலும குழந்தைகள் மதரசாவின் ஆசிரியை தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளியின் இமாம் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

posted by SM.YOUSUF

“ஈமான்” மங்கலம் கோல்டன் டவர் சிறுவர்களுக்கான சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “ஈமான்” என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இருதய சிகிச்சைக்காக ரூ 7231 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கொடுவாயூர் பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவருக்கு கடந்த 14.10.2011 அன்று இருதய சிகிச்சைக்காக (HEART ATTACK) மருத்துவ உதவியாக ரூ 7231 வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

தினந்ததோறும் சொற்பொழிவு நிகழ்ச்சி – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-10-2011 அன்று முதல் தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மாலிகுள் முல்க் பள்ளியில் சொற்பொழிவு நடைபெறுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
posted by SM.YOUSUF

”இஸ்லாமிய அடிப்படைக் கல்வி“ மங்கலம் கோல்டன் டவர் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று காலை 9:00 மணிமுதல் 10:00 மணிவரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “இஸ்லாமிய அடிப்படைக் கல்வி ” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்ப – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 11-10-2011 அன்று முதல் மஸ்ஜிதுல் மாலிகுல் முல்க் பள்ளியில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
posted by SM.YOUSUF

”இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” மங்கலம் தெருமுனைப் பிரச்சாரம்

இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சின்னவர் தோட்டத்தில் “இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

“இஸ்லாத்தின் அடிப்படை” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 17-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் “இஸ்லாத்தின் அடிப்படை ” என்ற தலைப்பில் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்பிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இறுதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 2250 மருத்துவ உதவி

பல்லடத்தில் வசிக்கும் செல்வராஜ் என்ற சகோதரருக்கு இறுதய அறுவை சிகிச்சை செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக கடந்த 14-10-2011 அன்று ரூபாய் 2250 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

மணி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் மணி என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 14-10-2011 அன்று அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது
posted by SM.YOUSUF

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” கோம்பை தோட்டம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 9-10-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மவ்லவி தாஹா அவர்கள் விரயம் என்ற தலைப்பிலும் ரசுல் மைதீன் அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களும் கூடி இருந்தவர்களும் கேட்டு பயன் பெற்றனர்.
posted by SM.YOUSUF

Wednesday 19 October 2011

மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


உள்ளே செல்லும் முன்:


(இணையத்தில் உலாவரும் மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு தேவையானவற்றையும், விருப்பமானவற்றையும் மட்டும் படித்துவிட்டு சென்றுவிடுவார்கள். (பதிவர்களாகவோ த‌னக்கென ஒரு தளத்தை உடையவர்களாகவோ இல்லாத பட்சத்தில்) அவர்கள் அத்தனை பேருக்கும்'வலைப்பதிவு', 'பதிவர்கள்', 'சமூக தளங்கள்', 'திரட்டி', 'ஓட்டுப்பட்டை'போன்ற விஷயங்கள்பற்றி தெரிந்திருக்குமா என்றால், சிலரைத் தவிர அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நானும் இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன் எனக்கும் இவை எதுவுமே அறிமுகம் இல்லாமல்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் (இதைப் பற்றி அறியாத, சாதாரணமாக படித்துச் செல்லும் வாசகர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு குழப்பமாக இந்த இடுகை அமைந்துவிடக் கூடாது என்பதால்) கீழ்க்காணும் இந்த சிறு விளக்கம் தேவைப்படுகிறது.

பல்வகை இணைய தளங்களில் ஒன்றான 'ப்ளாக்கர்'(Blogger/Blogspot/Blog)என்பது கூகுள் த‌ரும் ஒரு இலவச தளமாகும். இதனை தமிழில் 'வலைதளம்', 'வலைப்பதிவு', 'வலைப்பூ' என்கிறோம். ஏராளமான இலவச வலைப்பூ சேவைகள் இருந்தாலும் இந்த ப்ளாக்கர் சேவையின் மூலமே பெரும்பாலானவர்கள் வலைப் பதிவுகள் உருவாக்கி, அவரவர் கருத்துக்களையும் பலவித செய்திகளையும், கலைகளையும் மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம். இப்படிப்பட்ட வலைப் பதிவுகளை எல்லாம் ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஒன்று திரட்டித் தரும் இணையத் தளத்திற்குதான்'வலைத் திரட்டி' (சுருக்கமாக 'திரட்டி') என்பார்கள். தமிழ் மொழி வலைப்பதிவுகளுக்கும் பல திரட்டிகள் உள்ளன. குறிப்பாக 'இண்ட்லி', 'உலவு', 'தமிழிஷ்', 'திரட்டி', 'தமிழ் 10', 'தமிழ்ப் பூங்கா', 'தமிழ்வெளி'போன்றவற்றை சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் 'தமிழ் மணம்' என்ற திரட்டியுமாகும். சரி, விஷயத்திற்கு வருவோம்.)

சில நாட்களுக்கு முன் இந்த தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் பதிவுலகின் சக சகோதரர்களை நாகரிகமற்ற வார்த்தைகளில் உரையாடி இழிவுபடுத்தியமைக்கு முதலில் என் கண்டனங்களை பதிவுச்செய்துக் கொள்கிறேன். 



அதைத் தொடர்ந்து அவர் இட்ட‌ ஒரு பின்னூட்டத்தில், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும் எழுத்துப் பரிமாற்றங்களின்போதும் கூறிக்கொள்ளும் 'முகமன்' வார்த்தைகளையும் இழிவுபடுத்திக் கூறியுள்ளதற்காக தமிழ்மணத்திடம் முஸ்லிம்கள் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்மண நிர்வாகிகள் சரியான முறையில்விளக்கம் அளிக்காத வரை தமிழ்மணத்தின் மீதான எதிர்ப்பு தொடரும்என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்.

இதோ தமிழ்மணத்தின் அந்த நிர்வாகி கக்கிய விஷம்:

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

தமிழ்மண நிர்வாகிகளே! எங்கள் மார்க்கம் கற்றுத்தந்த, எக்காலத்துக்கும்/ நேரத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு முகமன் வார்த்தையை உங்களில் ஒருவர் கொச்சைப்படுத்துகிறார் என்றால், "இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது"என்பதுபோல் நீங்கள் கண்டும் காணாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது ஒரு நிர்வாகத்தின் பொறுப்பான நிர்வாகிகளாக அவர் சார்பில் இஸ்லாமியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?


தமிழ்மணத்துக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கு "ஜாதி/மத வெறியர்கள் பரப்பும் அவதூறுகளைப் புறந்தள்ளி இப்பதிவர் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறார்" என 'கிரீன் பேஜ்' (green badge) கொடுக்கிறீர்களே... அடுத்தவர்களுக்கு இடையூறு இன்றி அவரவர் மதங்களைப் பின்பற்றிச் செல்பவர்கள் உங்கள் பாஷையில் 'வெறியர்கள்' என்றால், அநாவசியமாக வலிய வந்து ஒரு மார்க்கத்தின் முகமனை கொச்சைப்படுத்துபவர்கள் 'மகா மட்டமான வெறியர்கள்' அல்லவா? அப்படிப்பட்டவர்களைப் புறந்தள்ளி 'ரெட் பேஜ்' கொடுத்து உங்கள் நிர்வாகத்தைவிட்டும் வெளியேற்றத் தயாரா? (எரிகிறதைப் பிடுங்கினால்தானே கொதிக்கிறது அடங்கும்..?)

தமிழ்மண நிர்வாகிகளே! இஸ்லாமிய முகமனை கேலி செய்துவிட்டதால் அதில் மாசு ஏற்படுத்தி விட்டதாக எண்ணிவிடவேண்டாம். ஒருபோதும் அதன் தூய்மை மாறாது. ஆனால் காற்றுக்கு எதிரே துப்பினால் அது முகத்தில்தான் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது தமிழுக்காக செய்யும் சேவை என்று நீங்கள் சொல்வதால், உங்கள் மூலம்தான் எங்கள் பதிவுகள் தூக்கி நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்பவில்லை. உங்களைப்போல் எத்தனையோ திரட்டிகள் உள்ளன என்பது உங்களுக்கும் தெரியும். பதிவர்களின் ஆதரவும் உங்கள் வளர்ச்சியின் ஒரு பங்கு என்பதும் உங்களுக்கு தெரியும்.ஆகவே....

இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும், எங்கள் சகோதர பதிவர்கள் பலரை கேவலப்படுத்தி இருப்பதற்கும் தமிழ்மணமாகிய நீங்களும், சம்பந்தப்பட்ட அந்த நிர்வாகியும் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே உங்கள் 'ஓட்டுப்பட்டை' தொடர்ந்து எங்கள் பதிவில் நீடிக்கும்; எங்கள் பதிவுகள் உங்கள் திரட்டியில் இணைக்கப்படும். அத்துடன் புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லவும் தயங்கமாட்டோம்..!
posted by SM.YOUSUF

Wednesday 12 October 2011

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” தலைப்பில் பெரியதொட்டம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதொட்டம் கிளை சார்பாக கடந்த 5.10.2011 புதன் இரவு 9.15 மணிக்கு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் சகோ சதாம் ஹுசைன் (MISC) உரையாற்றினார்.
posted by SM.YOUSUF

வாவிபாளையம் கிளையில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக கடநத் அக்டோபர் 9 / 2011 ஞாயிற்றுகிழமை முதல் பெரியவர்களுக்கான குரான் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் குரான் ஓதுதல் மற்றும் உச்சரிப்பு ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF

Tuesday 11 October 2011

பள்ளி கட்டிட நிதி _நாகை மாவட்ட மஷ்ஜிதூர் நூர் பள்ளி

IMG_0004.jpg
TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 1.10.2011 அன்று  நாகை மாவட்ட மஷ்ஜிதூர்  நூர் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உதவியாக ரூ 21062 வழங்கப்பட்டது.  அல்கம்துளில்லாஹ்...
posted by SM.YOUSUF

TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு, பத்திரிக்கை செய்தி


















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் சார்பாக TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது கடநத் 24-9-2011 அன்று தினரகன் பத்திரிக்கையில் வெளியானது. மேலும் தினத்தந்தியில் கடந்த 3-10-2011 அன்று வெளியானது.

posted by SM.YOUSUF

மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா



மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையில் கடந்த 25-9-2011 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.
posted by SM.YOUSUF

தாவா.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆயக்குடி கிராமத்தில் கடந்த 18-9-2011 அன்று தஃவா நிகழ்ச்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்களிடையே ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. பஷீர் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
posted by SM.YOUSUF

Wednesday 5 October 2011

திருப்பூரில் ரூபாய் 7045 மருத்துவ உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 10-9-2011 அன்று ஏழை சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 7045 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம் கடநத் 18.09.2011 அன்று நடைபெற்றது. இதில் தாயி பொறுப்பாளர் சகோ முஹம்மத் சலீம் அவர்கள் பேச்சாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். மேலும் தஃவா பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
posted by SM.YOUSUF

மங்கலம்கோல்டன் டவர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கோல்டன் டவர் கிளை சார்பாக கடந்த 17-9-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இரத்த தான சேவையை பாராட்டி விருது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 15-9-2011 அன்று திருப்புர் மாவட்டம் கலக்டர் மதிவாணன் விருது வழங்கினார்கள். இதை மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.posted by SM.YOUSUF

Thursday 8 September 2011

கேள்வி.? பதில்.!

கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள்?






பதில்:
நீர்
வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
இது மார்க்க ரீதியான காரணம்.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.மீன்களில் அந்த நிலைமை கிடையாது.

ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்

நூலின் பெயர்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்
posted by SM.YOUSUF