Monday 13 October 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  13-10-2014 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், அல்லாஹ்வை நினைவு கூறுவோம் என்ற தலைப்பில் சகோ. அன்சர்கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்... 

எஸ்.வி.காலனி கிளை சார்பாக எளிய மார்க்கம் நிகழ்ச்சி....

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக கடந்த 12.10.14 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநிலத் துணைத் தலைவர் சகோ. செய்யது இப்ராஹீம் அவர்கள் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...


ரூ.3100 மருத்துவ உதவி - தாராபுரம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 10-10-2014 அன்று டி.பி. நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற புதுக்கோட்டையை சார்ந்த சகோதரர் "நாகூர் கனி" அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.3100 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-10-2014 அன்று  கல்லூரி மாணவர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

சகோதரர்களுக்கு தனிநபர் தாஃவா - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   10-10-2014 அன்று  தனிநபர் தாஃவா நடைபெற்றது. இதில், தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை குறித்து சில சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப் பட்டது. சகோ. அன்சர் கான் பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-10-2014 அன்று ஆர்.பி. நகரில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். அன்சர் கான் இஸ்லாமும் முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

திருப்பூர் மாவட்ட செயற்குழு பற்றிய பத்திரிக்கை செய்திகள்...

திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.10.2014 அன்று நடைபெற்ற "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" க்கான திருப்பூர் மாவட்ட சிறப்பு செயற்குழு பற்றிய செய்தி தினகரன், தினமலர் போன்ற தினசரி பத்திரிக்கைகளில் வெளியானது. அல்ஹம்துலில்லாஹ்...
 

தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு பரிசு...

திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.10.2014 அன்று மாவட்ட  செயற்குழு  பெரியகடை வீதி மர்கஸில் நடைபெற்றது...

இந்த வருடம் தாவா பணிகளை வீரியமாக செய்த  கிளைகளுக்கு அவற்றின் பணிகளை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் பரிசு வழங்கப்பட்டது.

முதலிடம் பெற்ற மங்கலம் கிளைக்கு 30 திருக்குர்ஆன் தமிழாக்கம்,

இரண்டாம் இடம் பெற்ற கோம்பைதோட்டம் கிளைக்கு 25 திருக்குர்ஆன் தமிழாக்கம்,  

மூன்றாம் இடம் பெற்ற உடுமலை கிளைக்கு 20 திருக்குர்ஆன் தமிழாக்கம், 

மற்றும் பிறமத மக்களை அழைத்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்திய காலேஜ் ரோடுகிளைக்கு 15 திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்... 

திருப்பூர் மாவட்ட சிறப்பு செயற்குழு _ 12.10.14 ....


திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.10.2014 அன்று "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" செய்வது பற்றி மாவட்ட சிறப்பு செயற்குழு  பெரியகடை வீதி மர்கஸில் நடைபெற்றது.

மாநில துணைதலைவர் சகோ.செய்யதுஇப்ராஹிம் அவர்களும், மாநில செயலாளர் சகோ.கோவை ரஹீம் அவர்களும் கலந்துகொண்டு தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதன் அவசியம் பற்றியும், எப்படியெல்லாம் பிரச்சாரத்தை வீரியமாக செய்யலாம் என்றும் விரிவாக விளக்கம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்...