Thursday 10 July 2014

மங்கலம் கிளை சார்பாக சூனியம் குறித்து 50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளை சார்பாக  10.07.14 அன்று சூனியம் சம்பந்தமாக டிஎன்டிஜே மாநில தலைவர் p. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சவால் விடுத்த போஸ்டர்  மங்களம் பகுதியில் 20 இடங்களில் மொத்தம் இருபது (20) போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன.  அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்டம் சார்பாக சூனியம் குறித்து 500 போஸ்டர்கள் விநியோகம்


தமக்கு பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றின் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவோருக்கு ரு.50 இலட்சம் பரிசு தரப்படும் என்று டிஎன்டிஜே மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அறிவித்திருக்கிறார்.








இந்த அறைகூவலை மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக, 

திருப்பூர் மாவட்டம் சார்பாக 500 போஸ்டர்கள் அச்சடித்து 10.07.14 வியாழக்கிழமை அன்று  மாவட்டத்தில் இருக்கும் கிளைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக கடந்த 07.07.14, 08.07.14 மற்றும் 09.07.14   ஆகிய  மூன்று   நாட்கள் இரவுத் தொழுகைக்குப் பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில்  சகோ.யாசர்  அவர்கள்  என்ற தலைப்பில் தொடர் உரையாற்றினார்கள்.

குர்ஆன் வகுப்பு _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 10.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.இஸ்மாயில் அவர்கள் ஈஸா நபியை பின்பற்றுவோர் யார்? என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ யாசின் பாபு நகர் கிளை - 09.07.14

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 09.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சுலைமான் அவர்கள் சோம்பேறித்தனம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 08.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 08.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி)  அவர்கள்  “நபித்தோழர்களின் கவலைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக வட்டியில்லா கடனுதவி ரூ.15,000/-

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.07.2014 அன்று திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். தாஜுதீன் அவர்களுக்கு  ரூ.15,000/- வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.