Saturday 21 June 2014

அலங்கியம் கிளை சார்பாக நோட்டீஸ் விநியோகம்

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம்  அலங்கியம்   கிளை சார்பாக கடந்த   20.6.14  அன்று  செய்யாத குற்றத்திற்காக   சிறையில் வாடும் முஸ்லிம்கள்   என்ற   தலைப்பில்   500 நோட்டீசுகள் விநியோகம் செய்யப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்..

அலங்கியம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 15.6.14 அன்று  2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அவர்கள் எது நபி வழி? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதன் மூலம் மக்கள் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

"பிரார்த்தனை" _S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 20.06.2014 அன்று அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "பிரார்த்தனை" எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

"பித் அத் (நூதன வழிபாடுகள்)" _ ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 21.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "பித் அத் (நூதன வழிபாடுகள்)" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வேதத்தை வியாபாரமாக்குதல்" _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 21.06.2014 அன்று  சகோ.ஷிஹாபுதீன்  அவர்கள் "வேதத்தை வியாபாரமாக்குதல்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்" உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

"மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற "இஸ்ராயீல்' என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; என்று பரவலாக நம்புகிறார்கள்.
ஆனால் "இஸ்ராயீல்' என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.
ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் தனித்தனியான வானவர்கள் இருப்பதாக 32:11 வசனம் கூறுகிறது.
அதிகமான மக்களைப் பற்றி பன்மையாகப் பேசும் போது "அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள்'' என்று பன்மையாகவே கூறப்படுகிறது. இதை 4:97, 6:93, 8:50, 16:28, 16:32, 47:27 ஆகிய வசனங்களில் காணலாம்.
நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று 6:61, 7:37 வசனங்களிலும் பன்மையாகக் கூறப்படுவதைக் காணலாம்.
"அனைவருடைய உயிரையும் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் தான் இருக்கிறார்' என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.
ஒரு வானவர் உலகத்திலுள்ள அனைவருடைய உயிர்களையும் கைப்பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27, 79:2)

"தடுக்கப்பட்ட உணவுகள்" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 20.06.2014 அன்று  சகோ.இஸ்மாயில்  அவர்கள் "தடுக்கப்பட்ட உணவுகள்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நம்பிக்கை கொண்டவர்கள்" ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 19.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நம்பிக்கை கொண்டவர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழைசகோதரி குடும்பத்திற்கு ரூ.5465/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 19.06.2014 அன்று திருப்பூர் செட்டிபாளையம்  ஏழைசகோதரி. பாத்திமா அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.5465/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

"உலக கல்வியும் மார்க்க கல்வியும்" _தாராபுரம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "உலக கல்வியும் மார்க்க கல்வியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

.

"ரமலானின் படிப்பினை" _தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "ரமலானின் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

"நோன்பு தரும் படிப்பினை" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 19.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் "நோன்பு தரும் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...