Saturday 15 November 2014
ஹதீஸ் விளக்க உரைப் பயிற்சி _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு ஹதீஸ் விளக்க உரைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் மாணவர்கள் ஹதீஸ் படித்து விளக்க உரை நிகழ்த்தினர். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
தீவிரவாதத்திற்கு எதிராக பெண்கள் தாவா குழு நோட்டீஸ் கொடுத்து தாவா _ மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இணைந்து 11-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு பெண்கள் தாவா குழு சார்பாக அரசு பிரசவ மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு பிஸ்கட்கள் வழங்கி நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
ஹதீஸ்கலை பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கான ஹதீஸ்கலை விளக்க உரை வகுப்பு நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதில் மாணவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமாக கேள்வி கேட்டு பயன்பெற்றனர்.
இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
மனிதசங்கிலி பற்றி பத்திரிக்கை செய்தி.. திருப்பூர் மாவட்டம்
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக வருகிற 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மனிதசங்கிலி பற்றி
மாநில துணை தலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கம் வழங்கினார்..
மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்...
இதுபற்றி தினமலர் பத்திரிக்கை செய்தி.. 15.11.2014
Subscribe to:
Posts (Atom)