Monday 21 October 2013

கீர்த்திகா என்பவருக்கு “திருகுர்ஆன் தமிழாக்கம்”உட்பட புத்தகங்கள் – உடுமலை கிளை


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று இஸ்லாம் மார்க்கம் குறித்துஅறிய விரும்பிய  பிற மத சகோதரி.கீர்த்திகா அவர்களுக்கு 


இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  

திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

"நபிமார்களின் பிரச்சாரமும், படிப்பினையும் " _ செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்20.10.2013 அன்று சகோ.சலீம் அவர்கள்  "நபிமார்களின் பிரச்சாரமும், படிப்பினையும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வடுகன்காளிபாளையம் கிளை "கூட்டு குர்பானி" வரவு செலவு கணக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  யின் சார்பாக 20.10.2013 அன்று "கூட்டு குர்பானி " கணக்கு வெளியிடப்பட்டது..
கிளை சார்பில் கடந்த  16.10.2013 அன்று நடைபெற்ற 2மாடு  "கூட்டு குர்பானி" வரவு செலவு கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2000/= நிதிஉதவி _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பில் 18.10.2013 அன்று காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2000/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"அல்குர்ஆன்,ஹதிஸை பின்பற்றுவோம் " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 
TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பாக 20.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.  அப்துர்ரஹ்மான் (வாவிபாளையம்) அவர்கள் "அல்குர்ஆன்,ஹதிஸை பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 



கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து  வடுகன்காளிபாளையம் கிளை  மதரசா மாணவர்கள் கிராத் ஓதினார்கள்.....
 அல்ஹம்துலில்லாஹ்

செல்வராஜ் என்பவருக்கு “திருகுர்ஆன் தமிழாக்கம்”உட்பட புத்தகங்கள் – உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று பிற மத சகோதரர்.G.செல்வராஜ். (AITUC திருப்பூர் மாவட்ட செயலாளர்) அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகை" வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 20.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. சுமையா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


இறைவனை மறுப்போரே தீமைக்காக செலவிடுவார்கள் _மங்கலம் கிளை ஃபஜர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 21.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் இறைவனை மறுப்போரே தீமைக்காக செலவிடுவார்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,

 உணர்வு வார இதழ் 20 விற்பனை செய்யப்படுகிறது.. 





மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்15 தீன்குலப்பெண்மணி மாதஇதழ்15  
விற்பனை செய்யப்படுகிறது..

உலக வாழ்கையை பயந்துகொள்ளுங்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 20.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் உலக வாழ்கையை பயந்துகொள்ளுங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"இணைவைப்பு " _தாராபுரம் நகர கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 20.10.2013 அன்று    தாராபுரம்"பெரியபள்ளிவாசல் " அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.  ஷாஹிது ஒலி அவர்கள் "இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 20-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

 
இதில் இத்ரீஸ் அவர்கள் நரகத்தில் ஓர் திகில் பயணம் என்ற தலைப்பிலும் 
சம்சுதீன் அவர்கள் கடவுள் என்றால் யார்? என்ற தலைப்பிலும் 
சிக்கந்தர் அவர்கள் வாக்குறுதி என்ற தலைப்பிலும் 
பிலால் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் 
சரீஃப் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் 
செய்யது இப்ராஹீம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி 
கிளை சார்பாக 20.10.2013 
அன்று நடைபெற்ற 
சமூக நல்லிணக்க 
நிகழ்ச்சியில்  கலந்து
 கொண்ட பிறமத சகோதரர்களுக்கு 

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்- 10புத்தகங்கள்,
 மாமனிதர் நபிகள் நாயகம்- 10 புத்தகங்கள்,
 
இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை -5புத்தகங்கள்,
மற்றும் 
அர்த்தமுள்ள இஸ்லாம்-5  புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா 
செய்யப்பட்டது.







இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்றிதழ் _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று   S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில்



கடந்த 06-10-2013 அன்று கிளை சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கிய பிற மத சகோதரர்கள் 17 பேர் உட்பட 44  சகோதரர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது..

சமூக பணியில் முஸ்லீம்கள் _ S.V.காலனி கிளை சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று பிற மதமக்களை அழைத்து இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்து சொல்லும் வண்ணம்  S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் "சமூக நல்லிணக்க நிகழ்ச்சி" நடைபெற்றது...

சகோதரர். தெளபிக் அவர்கள்  "சமூக பணியில் முஸ்லீம்கள்" என்ற தலைப்பிலும்  
சகோதரர். பஷீர்  அவர்கள் "இஸ்லாம் ஒர் அறிமுகம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

 இதில் பிற மத சகோதரர்கள் 30  க்கும் மேற்பட்டோர்  உட்பட 50 க்கும் அதிகமான சகோதரர்கள் கொண்டனர்.

வாங்கிய வரதட்சனை ஐ திருப்பி ஒப்படைத்த S.V.காலனி கிளை சகோதரர் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று நமது கிளை  சகோதரர் .இதாயத்துல்லா அவர்கள் அறியாமை காலத்தில் தெறியாமல் வாங்கிய வரதட்சனை தொகை ரூ.10000/-  ஐ  உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தார்...
 அல்ஹம்துலில்லாஹ்.