Friday 25 February 2011

CRICKET

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு. ஓர் அவசர அலசல்.


உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் மிகவும் பரபரப்பாகவும், மும்முரமாகவும் உலகம் முழுவதும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது.

இந் நிகழ்கால நிகழ்வுகளில் கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக இந்த கட்டுரை வரையப் படுகிறது.

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு.

ஒரு விளையாட்டாக இருந்தால் அந்த விளையாட்டை விளையாடுவதின் மூலம் உடலுக்கு ஒரு பயிற்சி கிடைக்க வேண்டும். ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அந்த விளையாட்டு ஒரு நன்மையைத் தர வேண்டும் எந்த நன்மையும் இல்லாத விளையாட்டை விளையாட்டுக்கள் பட்டியலில் சேர்பதே ஒரு சிறந்த சிந்தனையாளரின் பண்பாக இருக்க முடியாது.

11 பேர்கள் விளையாட பல கோடி மக்கள் அந்த விளையாட்டை பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள்(?) விளையாடுவது 11 பேர்தான் அதிலும் அவர்களுக்குக் கூட அந்த விளையாட்டினால் எந்த நன்மையும் இல்லை இதே நேரத்தில் அதைப் பார்க்கும் பல கோடி மக்களும் தங்கள் நேர காலத்தை வீனாக்கி தீமையை சம்பாதிப்பதுதான் கவலையான விஷயம்.

வாழ்க்கையாகிவிட்ட கிரிகெட் விளையாட்டு(?)

ஒரு விளையாட்டென்ரால் அது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாக இருக்களாம். அதனால் உடலுக்கும் உள வளத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்களாம்.

வியர்வை வெளியாகுதல், ஓடி ஆடித் திரிவதின் மூலம் இரத்த ஓட்டம் சீராக அமைதல் போன்றவற்றால் மிகப் பெரிய உடலியல் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்களாம்.

ஆனால் இந்த கிரிகெட் விளையாட்டைப் பொருத்த வரையில் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு பகுதி என்பது போய் வாழ்க்கையே விளையாட்டாகிவிட்டதுதான் கவலையான செய்தியாகும்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் தொழிலாக கிரிகெட் இருக்கிறது.

அவர்கள் விளையாடினால் அவா்களுக்கு பணம் கிடைக்கிறது.

இதே நேரம் அதை இரவு, பகலாக கண் விளித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன கிடைக்கிறது? நோய் தான் மிச்சமாகிறது.

இன்றைக்கு கிரிகெட்டே பலருடைய வாழ்க்கை என்றாகிவிட்டது.

இதனால் சமுதாயத்தில் பொது மக்களுக்கு மத்தியில் பலதரப் பட்ட பிரச்சினைகளும் சிக்கள்களும் உருவெடுத்துள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.

நேரத்தை விரயப் படுத்தும் வீன் விளையாட்டு.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நேரம் என்பது மிகவும் முக்கியமானது.அதிலும் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையில் நேரம் என்பது அவனுடைய உயிருக்கு நிகரானது. காலம் பொன் போன்றது என்பார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தவரை காலம் பொன்னை விட மேலானது உயிரைப் போன்றது.

உயிர் போனால் எப்படி திரும்பப் பெர முடியாதோ அது போல் காலம் கடந்து விட்டால் அதனை நாம் திரும்பப் பெற முடியாது. பொன்னை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் நேரத்தை சம்பாதிக்க முடியாது.

கடைசி நேரத்தில் பரீட்சையை தவர விட்டவனிடம் நேரத்தின் மகிமையைக் கேட்டுப் பார்க்கச் சொல்வார்கள் நேரம் என்பது எவ்வளவு தேவையான முக்கியமாக விஷயம் என்பதை அவன் சொல்லுவான்.

ஆனால் இந்த கிரிக்கெட் விளையாட்டினால் எந்தளவுக்கு நேர விரையம் ஏற்பட்டாலும் நம் சகோதரர்கள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

ஒரு நாள் ஆட்டம், மூன்று நாள் முக்கோணத் தொடர், டெஸ்ட் ஆட்டம், உலகக் கிண்ணம், ஆசியாக் கிண்ணம், என்று எத்தனையோ பெயர்களின் கால விரையம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆட்டம் என்று சொல்லி அந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு ஒரு நாள் ஆட்டத்தில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அதனைப் பார்ப்பதற்காக டி.விக்கு முன் குந்தியிருப்பவர்களுக்கு என்ன பயன் ஏற்படுகிறது? நேர, கால, மின்சார , உடல் சக்தி விரையம் இதுதான் மிச்சம்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இவ்வாறு பேசுகிறான்.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் இழப்பில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(103 - 1-3)

இறைவன் ஒரு பொருளின் மீது அல்லது ஒரு விஷயத்தின் மீது சத்தியமிட்டால் அந்த விஷயத்திற்கு அல்லது அந்தப் பொருளுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் உண்டென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட திருமறை அத்தியாத்தின் முதல் வசனத்திலேயே இறைவன் காலத்தின் மீது சத்தியம் செய்கிறான். காலத்தின் மீது இறைவனே சத்தியம் செய்து சொல்கிறான் என்றால் நேர காலம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் காலத்தின் மேல் சத்தியம் செய்துவிட்டு. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறான்.

நேரத்தை நமது இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டுமே தவிர பாழாக்கக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது.

மறுமை நாளில் இறைவனின் விசாரனையைப் பற்றி நபியவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

வாழ்நாளைக் கழித்த விதம், கற்ற கல்வியின் படி நடந்த விதம், பொருளைச் சம்பாதித்து அதனை செலவு செய்த விதம், உடலை அழித்த விதம் ஆகியவை பற்றி ஓர் அடியான் மறுமையில் விசாரிக்கப் படாத வரை அவனுடைய கால்கள் அவ்விடத்தை விட்டும் நகராக என்று நபியவர்கள் கூறினார்கள். ( திர்மிதி – 2341 தாரமீ – 536 )

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் வாழ்நாளைக் கழித்த விதம் பற்றி விசாரிக்கப்படும் போது நல்ல முறையில் கழித்ததாக பதில் சொல்லிவிட்டால் அவன் மறுமையில் வெற்றி பெற்றவனின் பட்டியலில் சேர்ந்து விடுவான். ஆனால் இந்த கிரிக்கெட் மோகத்தினால் நிறையைப் பேர் அவா்களுடைய வாழ் நாளை வீனாக கழிக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் மறுமையில் தங்கள் நிலை என்னவாகப் போகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள் வேண்டும்.

நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் தரி கெட்ட விளையாட்டுக்களிலும் வீன் பொழுது போக்கான அம்சங்களிலும் ஈடுபடுபவர்கள் மறுமை நாளின் எந்த நிலையில் இருப்பார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா நான் விட்டு வந்ததில் (வாழ் நாளில்) நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாரில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான்.அவா்கள் உயிர்பிக்கப் படும் நாள் வரை அவா்களுக்குப் பின்னால் திறை உள்ளது. (23 – 99-100)

உலகத்தில் உள்ள வீனான காரியங்களில் நாம் வாழும் காலத்தில் மூழ்கி இருந்துவிட்டு மரணித்ததின் பின்னால் இறைவனிடம் மன்றாடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

முஃமின்கள் எப்படி இருப்பார்கள்?

உண்மையான ஒரு முஃமின் தனது வாழ்க்கையில் வீனான காரியங்களில் ஈடுபடாமல் தன்னைக் காத்துக் கொள்வான். வீனான காரியங்களில் ஈடுபடுபவர்கள் உண்மையில் முஃமின்களாக இருக்கவே முடியாது.

இறைவன் முஃமின்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவா்கள் வீனானதைப் புறக்கணிப்பார்கள்(23-3) என்று குறிப்பிடுகிறான்.

உண்மையில் கிரிகெட் போன்ற இந்த வீனான விளையாட்டுக்களை புறக்கணிப்பவர்கள் மாத்திரம் தான் உண்மையான முஃமின்களாக இருக்க முடியும் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டும், முஸ்லீம்களின் வணக்க வழிபாடுகளும்.

கிரிக்கெட் மீது ஆழ்ந்த விருப்பமும், ஆசையும் கொண்டு கிரிக்கெட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அவா்களின் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

விளையாட்டு என்று வந்து விட்டால் தொழுகைக்கும் அவா்களுக்கும் தொடர்பின்றிப் போய்விடுகிறது. இரவு, பகலாக விளையாட்டில் மூழ்கியிருப்பார்கள் லுஹர் இல்லை, அசர் இல்லை, இரவு ஆட்டமாக இருந்தால் மஃரிப் இல்லை, இஷா இல்லை கேட்டால் விளையாட்டில் மும்முறமாம்?

என்னே விளக்கம் ?????????

தரி கெட்ட இந்த விளையாட்டை நேசித்து நாளை சுவர்க்கத்தை இழக்கும் நிலை தேவை தானா?

சில நேரங்களில் சிலர் சொல்லுவார்கள் முஸ்லீம் கிரிக்கெட் வீரர்கள் என்றால் அவா்கள் வணக்க விஷயத்தில் சரியாக இருப்பார்கள் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் உடனே அல்லாஹ்வைப் புகழ்வார்களாம்.

தொழுகையையே வேண்டுமென்று புறக்கணிக்கும் இவா்கள் மற்ற விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

ஒரு பவுன்டரி அடித்துவிட்டு அதற்காக மைதானத்தில் சுஜுது செய்துவிட்டால் நமது இஸ்லாமிய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீரனை தனது ஆத்மீக குருவாகக் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஐந்து வேலைத் தொழுகைக்கு அவன் சுஜுது செய்யவில்லை என்பது அவா்களுக்குத் தெரியாது கடமையான ஜும்ஆவை அவன் விட்டு விட்டான் என்பது அவா்களின் கண்களுக்கு தென்படுவதில்லை.என்றாவது ஒரு நாள் மைதானத்தில் அவன் செய்த சுஜுதுக்காக மாத்திரம் அவனை தூக்கி தலையில் வைத்துக் கொள்கிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(62-9)

இறை இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்வணிகமோ வர்த்தகமோ அவா்களை அல்லாஹ்வின் நினைவைவிட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதைவிட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவா்கள் அஞ்சுவார்கள்.(24- 37)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள் (63-9)

மேற்கண்ட வசனங்களை ஒன்றுக்குப் பல முறை மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள். அந்த வசனங்கள் எவ்வளவு ஆழமான, அழகான அறிவுரைகளைக் கூறும் என்பது புரியும்.

இறைவனை நாம் எப்படி நினைக்க வேண்டும், இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தடுக்கக் கூடியது எது என்பவைகளைப் பற்றி தெளிவான, அழகான, ஆழமான கருத்துக்களை இறைவன் அதிலே படித்துத் தருகிறான்.
நாம் எந்தக் காரணம் கொண்டும் இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தூரமாக்கிக் கொள்ளக் கூடாது.

சூதாட்டமான கிரிக்கெட் விளையாட்டு (?)

விளையாட்டு என்ற பெயரில் ஆரம்பமான கிரிக்கெட்டின் இன்றைய நிலை என்னவெனில் முழுக்க முழுக்க சூதாட்டத்துடன் அது தொடர்பாக இருக்கிறது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பேசப்படாத நாளே இல்லை. கிரிக்கெட் சூதாட்டம் இல்லாத நாடே இல்லை இதுதான் இன்றையை கிரிக்கெட்டின் லட்சனமாக இருக்கிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட ரசிகர்கள் வரை அனைவரும் இந்த சூதாட்டத்தில் பங்கெடுப்பதை யாரும் மறுக்க முடியாது.

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விளகிக் கொள்ள மாட்டீர்களா? (5-91)

கிரிக்கெட்டைப் பொருத்தவரை மேற்கண்ட அனைத்துத் தீமைகளும் கிரிக்கெட்டில் இருப்பதைப் பார்க்களாம்.

கிரிக்கெட் வீரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும், அதனோடு தொடர்பு படும் பெரும்பாலானவர்களும் மேற்கண்ட தீமைகளில் தங்களை இணைத்துக் கொள்வதை யாரும் மறுக்க முடியாது.

கிரிக்கெட் வீரர்களுக்காக மது பரிமாறப்படுகிறது. மதுவோடு அவா்கள் தொடர்புபடுகிறார்கள்.

சூதாட்டத்தில் தாராளமாக அவா்கள் பங்கு கொள்கிறார்கள். ரசிகர்களில் பெரும்பகுதியினரும் சூதாட்டத்தில் பங்கு கொள்கிறார்கள்.

இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களும், இதனை ஆதரிப்பவர்களும் தொழுகை விஷயத்தில் பொடுபோக்காகவே இருக்கிறார்கள் ( இது பற்றி முன்னனரே விபவரிக்கப்பட்டுள்ளது. )

அன்பின் சகோதரர்களே !

பெரியவர்களே !

இளைஞா்களே !

கல்வியாளர்களே !

இந்த வழிகெட்ட கிரிக்கெட் மோகத்தைவிட்டும் விலகி தூய்மையான, மார்க்கம் சொல்லித் தருகின்ற மார்க்கத்திற்கு முரனாகாத, உடல் அளவில் நன்மை தரக்கூடிய விளையாட்டுக்களை விளையாட்டாக குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் செயல்படுத்தி இம்மை, மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக!

இந்து முன்னனி பாசிச வெறி போஸ்டர்! TNTJ வின் பதிலடி!!


மதுரையில் பாசிச வெறி பிடித்த இந்து முன்னனியினர் முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் வகையில்  முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.

(இந்து முன்னனி போஸ்டர்)
இதனைத் தொடர்ந்து அதற்கு பதில் கொடுக்கும் வண்ணம் மதுரை   மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 19-2-11 அன்று மதுரை முழுவதும் யார் அப்பாவிகள் என்ற தலைப்பில் போஸ்டர்  ஒட்டப்பட்டது.

(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போஸ்டர்)


மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?



கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் 32 பற்களும் தெரிய சிரிக்கிறார் சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர். கேவலம்3 சீட்டு கொடுத்ததற்கே இந்த சிரிப்பு என்றால் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசிவாங்கியதைப் போல ஆசி வாங்கியிருப்பார் போலத் தெரிகிறது. முதலில் 15தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு அதிலே 12 சீட்டு கேட்டார்களாம். பிறகு 12ல் இருந்து குறைத்து 7 க்கு வந்தார்களாம். அப்பறம் இன்னும் கொஞ்சம் குறைத்து 5க்கு வந்தார்களாம். அப்புறம் விடாப்புடியாக 5 தொகுதிதான் வேண்டும் என சிறுபிள்ளைகள் அடம்பிடிப்பது போல தரையில் உருண்டு புரண்டு அடம்பிடித்தார்களாம். ஆனால் இவர்களின் அழுகுரல்களைக் கேட்டு கொஞ்சம் கூட மனமிறங்காத கருணைத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தா 3 தான் தருவேன் என ரொம்ப கறாராய் சொல்லி விட்டாராம்.
யார்கிட்ட உட்றீங்கானும் ரீலு? ஏற்கனவே 2 சீட்டு வாங்குறது தான் சமுதாய மானம் என சொல்லி கலைஞரிடம் உங்கள் மாப்பிள்ளை மிடுக்கை காட்டினீர்கள். அவரும் உங்கள் பலத்தை நினைத்து பயந்து பயந்து ஒரு சீட்டு தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த ஒரு சீட்டில் யார் போட்டிடுவது என கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்,நிரந்தர பொதுச்செயலாளருக்கும் குடுமிபிடி சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக 2 சீட்டாவது தாங்க என மறுபடியும் போய் கதவைத் தட்ட அவர்கள் உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச்சாத்தி விட்டார்கள். அதற்குபிறகு தான் உங்களின் தனிபலத்தை நிறுபித்தீர்கள். அதாவது உங்கள் இயக்கத்திற்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் நீங்கள் வாங்கிய வாக்கு வங்கியின் மூலம் அம்பலமாக உங்கள் நிலை கண்டு சிரிக்காதவர்கள் யாருமில்லை.
இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் இப்போது கூட்டணி சேர்ந்து கொண்டு இப்போது கொடுத்த 3 சீட்டை இப்படி கேவலமாக பல்லிளித்து வாங்கிக் கொண்டு போஸ் கொடுக்கிறீர்கள். இதுல வேற அண்ணன் பன்னீர் செல்வம் கையப் புடிச்சிக்கிட்டு கெஞ்சினாராம். அம்மாவைப்பத்தி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் உங்களின் கும்மாஞ்சி வேலைகள் பலிக்கும். கருணாநிதி வேண்டுமானால் இழுவை போட்டுப் பார்ப்பார். ஆனால் ஜெயாவைப் பொருத்தவரை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என ஒரே போடாக போடக்கூடியவர் எனபது எல்லாருக்கும் தெரியும். வேனுமினா 3 சீட்ட வாங்கிக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நடையைக்கட்டுங்கள் என அம்மா சொல்லியிருப்பார். உடனே கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் போட்டியிட 2 சீட்டு கிடைத்தால் போதும் என்ற ரீதியில் நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் சிரிப்பே ஆயிரம் கதை சொல்கிறது தலைவரே!
மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன் என்று தமுமுகவின் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு சால்ஜாப்பு சமாளிப்பு பதில்கள் அவர்கள் தளத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையாக இந்த கேள்விகளுக்கு அவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனையான பதில்கள் இதோ.
கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?
ஏன்! ஏற்கனவே சமுதாய மானம் காக்கப்போறோமுனு சொல்லிக்கிட்டு குப்புற விழுந்து மீசையில் மண்ணு ஒட்டுனது போதாதா! மறுபடியும் இந்த அம்மாகிட்டையும் வம்ப இழுத்துட்டு வரிஞ்சிகட்ட்டிக்கிட்டு நின்னா என்ன ஆகும்னு நல்லா தெரியும். அதனால தான் வந்த வரைகும் லாபம்னு 3 வாங்கிக்கிட்டோம். நல்லவேளை இதுவாவது கெடச்ச்தே.
கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது,விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?
ஆமாம்! கூடுதல் தொகுதி வேண்டி அதிமுகவை கண்டித்து தாம்பரத்தில் சாலைமறியல் போராட்டம், மெரினாவிலே சிறை நிரப்பும் போராட்டம், சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம்,அவ்வைசண்முகம் சாலையில் அமைந்துள்ள‌ அதிமுக தலைமை அலுவலக வாசலில் உக்கார்ந்து கொண்டு யாரும் உள்ளே செல்லக்கூடாது என பாதைமறியல் போராட்டம். விமர்சிப்பவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதேபோல மக்களைப் பற்றியும் கவலையில்லை. எங்கள் கவலையெல்லாம் இந்தமுறையாவது கொஞ்சம் அதிகமா ஓட்டு வாங்கமுடியுமான்னு தான்.
கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?
முதலில் எங்களைக் காத்துக் கொள்கிறோம். அப்பறம் பாக்கலாம் சமுதாயம் குறித்து
கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..
ஆமா..ஆமா..கின்னஸ் சாதனை இல்லையா? சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களா? ஆனால் அவர்கள் எங்களுக்குஓட்டுபோடுவார்களா?
கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..
அப்படியா! பரவாயில்லையே! எங்களுக்கே தெரியாத விசயமெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பேஷ்..பேஷ்..!
கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...
நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியை ஒப்பிடும் போது எங்களுக்கு 3 என்பது அதிகம் தான்.
கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...
நாங்க எப்பய்யா வேனாமுனு சொன்னோம்! இன்னொரு நாள் போயி பேசலாமுனு நெனைக்கும் போது தான் கலைஞர் கதவ சாத்திட்டாரே! அப்படியிருந்தும் தலைவர் துபாயில், பொதுச்செயலாளர் சவூதியிலும் இருப்பதால் அவர்கள் வந்து பேசுவார்கள் என அறிக்கையெல்லாம் விட்டுப்பார்த்தோம். ஆனால் எதற்குமே மசியவில்லை கலைஞர்
கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?
அதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டால் காலத்தை ஓட்ட முடியுமா?அரசியல்னு வந்துட்டா இது போன்ற அம்புகளையெல்லாம் தாங்கித்தானே ஆகனும்.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...,
நன்றி: ஃபித்னா.காம்