Saturday 18 April 2015

ஆணாதிக்கத்தின் அடையாளம் தாலியா? ,ஹிஜாபா? _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 18/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ஆணாதிக்கத்தின் அடையாளம் தாலியா? ,ஹிஜாபா?  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
..அல்ஹம்துலில்லாஹ்...

நோயை சபிக்காதீர் _ஜி.கே.கார்டன்கிளைதினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 18/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் நோயை   சபிக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

மங்கலம் கிளை புக் ஸ்டால்



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 17.04.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது

யாருக்கு அருள்புரிந்தாயோ அவர்களின் வழி _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

 திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 18-4-2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்"அவர்கள்  (வழி தவறியவர்கள் வழி அல்ல, நீ யாருக்கு அருள்புரிந்தாயோ அவர்களின் வழி (அத்தியாயம் 1:5,6,7 வசனத்திற்கு)  தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – பெரியதோட்டம் கிளை



திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 17-04-2015 அன்று ஷிர்க்குக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்குக்கான பொருட்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…

"நேர்ச்சைகள் அல்லாஹ்விடம் மட்டுமே" -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "நேர்ச்சைகள் அல்லாஹ்விடம் மட்டுமே" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

படிப்பினை பெறுவோம் _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் பஷீர் அலி அவர்கள் " படிப்பினை பெறுவோம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

"வெட்கம் ஈமானின் ஒரு கிளை " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "வெட்கம் ஈமானின் ஒரு கிளை "என்ற தலைப்பில் உரையாற்றினார்

செரங்காடு கிளை புக்ஸ்டால்



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17/4/15 அன்று புக்ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏறாலமான தலைப்புகளில் புத்தகங்கள்  விற்பனைக்காக வைக்கப்பட்டது

பிறமத சகோதரியிடம் மூடநம்பிக்கை குறித்த தாவா -பல்லடம் கிளை

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 18.04.2015 அன்று  பிறமத சகோதரியிடம் மூடநம்பிக்கை  குறித்த தாவா செய்து அவரிடம்  இருந்த தாயத்து கயிறுகள் அகற்றப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

நேர்வழி _S.V காலனி கிளை குர்ஆண் வகுப்பு



திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 17.04.15அன்று
  குர்ஆண் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "நேர்வழி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு ஏகத்துவம் வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது

"நல்லொழுக்கம் " _பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "நல்லொழுக்கம் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

பெற்றோரை சபிக்காதீர் _ ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 16/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் பெற்றோரை சபிக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

நடுநிலை மார்க்கத்தில் உண்டா? திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் பஷீர் அலி அவர்கள் "நடுநிலை மார்க்கத்தில் உண்டா?" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

எங்களை நேரான பாதையில் செலுத்துவாயாக! _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 17-4-2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள்  எங்களை நேரான பாதையில் செலுத்துவாயாக! என்பதற்கு (அத்தியாயம் 1:5 வசனம்) விளக்கமளித்தார்கள்

DVD ஸ்டால் _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/4/15 அன்று DVD ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏறாலமான தலைப்புகளில் DVD க்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது

இணைவைப்பு தகடுகள் அகற்றப்பட்டது _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 16/4/15  அன்று இணைவைப்பிற்கு எதிராக  தாவா செய்து ஒருகடையில்இருந்த தகடுகள் அகற்றப்பட்டது.

பிற மத சகோதரர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 16/4/15  அன்று பிற மத சகோதரர் அவர்களுக்கு தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்....? என்ற புத்தகம் அன்பளிப்பாக தரப்பட்டது

” என்னை கவர்ந்த ஏகத்துவம் _ 75 மினி போஸ்டர்கள் _ஜின்னாமைதானம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 16.04.15 அன்று ” என்னை கவர்ந்த ஏகத்துவம்” என்ற தலைப்பில் (சுன்னத்ஜமாத் மதரஸாக்களில் பயின்று ஏகத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட 30 க்கும்,மேற்பட்ட ஆலிம்கள் ஆற்றிய உரை சீ டி க்களாக கிடைக்கும்) 75 மினி போஸ்டர்கள் தாராபுரம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

சகோதரர்க்கு 3புத்தகங்கள் வழங்கி தனிநபர்தாஃவா _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   09.04.15 அன்று சகோதரர். லியாகத் அலி அவர்களுக்கு தனிநபர்தாஃவா செய்யப்பட்டது.  கொள்கை விளக்கம், இஸ்லாமிய கொள்கை, இறைவனிடம் கையேந்துங்கள் ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

2 பிறமத சகோதரர்களுக்கு தாஃவா_கோம்பைத் தோட்டம் கிளை



 திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   10.04.15 அன்று பிறமத சகோதரர்கள்.  ஹரிதாஸ், விஜய் ஆகியோருக்கு சூனியம் என்பது ஏமாற்று வேலை என்று கூறி தாஃவா செய்யப்பட்டது.  மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம்2 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பூமிஉருண்டைஎன்பதைஉணர்த்தும்பயணம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 16/04/2015 அன்று மஃஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சலீம் அவர்கள் 274.  பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம் எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

74. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

துல்கர்கணைன் என்ற மன்னர் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது.
துல்கர்ணைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் மேற்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
உலகம் உருண்டையாக இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அப்போதுதான் கிழக்கு நோக்கிப் புறப்பட்டவர் மேற்கு நோக்கி வந்து சேர முடியும்.
உதாரணமாக ஒரு பெரிய உருண்டையை ஒரு சட்டத்தில் நிறுத்தி வையுங்கள். உங்கள் விரலை அதன் மேற்புறத்தில் வைத்து விரலை நகர்த்திக் கொண்டே ஆரம்பித்த இடத்துக்குக் கொண்டு வாருங்கள்.
கிழக்கிலிருந்து மேற்காக விரலைக் கொண்டு சென்றால் பாதி உருண்டை வரை மேற்கு நோக்கிச் சென்ற உங்கள் விரல் உருண்டையின் சரிபாதியைக் கடந்த பின் கிழக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து  ஆரம்பித்த இடத்தை அடையும்.
சென்னையில் உங்களுடன் இருக்கும் ஒருவர் கிழக்கு நோக்கி நேர்கோட்டில் பயணிக்கிறார். அவர் பயணித்துக் கொண்டே இருக்கிறார். நீங்களும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள். 180 டிகிரி அதாவது சென்னைக்கு நேர் கீழே உள்ள பகுதிவரை கிழக்கு நோக்கியே சென்ற அவர் 180 டிகிரியை அடைந்ததும் மேற்கே திரும்ப ஆரம்பித்து விடுவார். மேற்குத் திசையில் இருந்து உங்களை அடைவார்.
ஒரு மணி நேரத்தில் உலகைச் சுற்றும் வேகத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சென்னயில் இருந்து உங்களுடன் இருந்த ஒருவர் கிழக்குத் திசையில் நேர்கோட்டில் பயணிக்கிறார். ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கு அவர் வந்து விடுவார். அவர் எந்தத் திசையில் புறப்பட்டாரோ அந்தத் திசையிலிருந்து அவர் உங்களை அடைய மாட்டார். எதிர்த்திசையிலிருந்து தான் வந்து சேர்வார்.
பூமி உருண்டை என்பதால் பாதியைக் கடந்ததும் திசை மாறிவிடும்.
சாதாரணமாக எந்த உருண்டையை நீங்கள் பார்த்தாலும் பாதி உருண்டை ஒரு திசையை நோக்கினால் மீதி உருண்டை எதிர்த்திசையைத் தான் நோக்கும். அப்படி நோக்காவிட்டால் அது உருண்டையாக இருக்காது.
ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் போது கூட மிகக் கவனமாக இந்த அறிவியல் உண்மையைக் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்று