Wednesday 31 October 2012

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ



TNTJ திருப்பூர் மாவட்டம்  சார்பாக 30.10.2012 அன்று திருப்பூர் காயிதே மில்லத் நகரை சார்ந்த ஏழை சகோதரர்.ஃபாரூக் அவர்களின் *எழும்பு மூட்டு *மருத்துவ  செலவினக்களுக்கு ரூபாய் 3,100 /=* *TNTJ திருப்பூர் மாவட்ட தலைமை மர்க்கஸில் ஜூம்மாஹ் வசூல் செய்து வழங்கப்பட்டது.
POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை_உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை 
சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு 
மஸ்ஜிதுத் தக்வா  பள்ளி எதிரில் உள்ள திடலில் 
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
இதில் சகோ.பழனி சேக் மைதீன்அவர்கள்
 "இப்ராகிம் நபி வாழ்வில் படிப்பினை பெறுபவர்களே முஸ்லிம்கள் "என்று உரையாற்றினார்.
பெருவாரியான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ் !
POSTED BY மாணவரணி SHAHID

Sunday 28 October 2012

நீங்களும் செய்யலாமே....நோட்டிஸ் தஃவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக ஹஜ்ஜுப்பெருநாள் அன்று இஸ்லாம் கூறும்
கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரத்தில் சாக்லேட் இணைத்து மாற்றுமத
 சகோத்தரகளுக்கு வழங்கப்பட்டது.இவ்வாறு ஆயிரம் துண்டு பிரசுரங்கள் மாற்றுமத சகோதரர்கள் இருந்த வீடுகளில் கடைகளில் முக்கிய சாலைகளில் பேருந்துகளில் இரு சக்கர வாகனங்களில் வழங்கப்பட்டது.இதை படித்த மாற்றுமத சகோதரர்கள் சிலர் இஸ்லாத்தை மேலும் அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்கள். ஒரு பஸ்சில் இருந்த நடத்துனர் இந்த நோட்டிசை படித்து விட்டு பஸ்சில் இருக்கும்  அனைவருக்கும் கொடுக்கும் வரை பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். மேலும் அருகில் உள்ள மாற்றுமதத்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டது




POSTED BY மாணவரணி SHAHID

அழைப்பு பணி-மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்

சார்பாக  கூட்டு குர்பானியில் சேர்ந்த 35 நபர்களையும் ஆர்வப்படுத்தும்

விதமாக  ஒவ்வொருவருக்கும் இலவசமாக நபிகளாரின் நற்போதனைகள்

மற்றும்  குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.


POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை-மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்

சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு மஸ்ஜிதுல் மாலிகுள்

முல்க் பள்ளி அருகில் உள்ள திடலில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

நடைபெற்றது. இதில் சகோ.சலீம் misc அவர்கள் உரையாற்றினார்


POSTED BY மாணவரணி SHAHID

Thursday 18 October 2012

மாணவரணி சார்பாக தர்பியா நிகழ்ச்சி-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 14-10-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் காலை 09:30 மணி முதல் 11:00 மணி வரை சகோ தவ்ஃபீக் அவர்கள் தொழுகைப் பயிற்சி அளித்தார் 11:00  முதல் 1:00 மணி வரை சகோ முஹம்மதுசலீம்அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திறக்கும் பெற அமைப்புக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார் இதில் 63 பேர் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்) 


POSTED BY மாணவரணி SHAHID

Wednesday 17 October 2012

மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி-உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பில் 
மடத்துக்குளம் தாலுக்கா ருத்ரா பாளையம் கிராம
 (பூர்வீக மஸ்ஜித் )பள்ளிவாசலில்  
வாரந்திர பயான் (மார்க்க  விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி )
14.10.2012 அன்று அசர்  தொழுகைக்கு பிறகு நடைபெற்றது .
மாநில பேச்சாளர் சகோதரர்.கோவை ஜாகிர்  அவர்கள் 
"மறுமைநம்பிக்கை  "எனும் தலைப்பில் சிறப்பான
 உரை  நிகழ்த்தினார் .
பள்ளியின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கி யில் உரை நிகழ்த்தியதால் 
ஏராளமான கிராம ஆண்களும் பெண்களும் 
கேட்டு பயன் பெற்றனர்.

POSTED BY மாணவரணி SHAHID

Sunday 14 October 2012

வாழ்வாதார உதவி-உடுமலை 10102012




TNTJ திருப்பூர் மாவட்டம் _ உடுமலை கிளையின் சார்பாக 
10.10.2012 அன்று உடுமலை   பகுதியை  சார்ந்த  ஏழை சகோதரி.சுலைகா  அவர்களின்  
வாழ்வாதார  செலவினக்களுக்கு  ரூபாய் 2,500 /=
TNTJ உடுமலை கிளை ஜகாத்  நிதிலிருந்து   உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

POSTED BY மாணவரணி SHAHID

Tuesday 9 October 2012

மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் 07102012


 திருப்பூர் மாவட்ட தலைமை  சார்பாக 07.10.12 அன்று மதியம் 2.30 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.இதில் மாநில பேச்சாளர்கள் H.M.அஹமது கபீர் , மற்றும் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி ஆகியோர் "பேச்சின் ஒழுங்குகள் மற்றும் நெறிகள்" குறித்து மாவட்ட பேச்சாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.


POSTED BY மாணவரணி SHAHID

இரண்டு பிற மத சகோதரர்களுக்கு தஃவா-V.K.P. கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளையின் சார்பாக 02-10-2012 அன்று இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது  
POSTED BY மாணவரணி SHAHID

பெண்களுக்கான தர்பியா மற்றும் தொழுகைப் பயிற்சி பயான்-V.K.P. கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளையின் சார்பாக 01-10-2012 அன்று மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது இதில் தொழுகைப் பயிற்சி மற்றும் பயான் நடைபெற்றது


POSTED BY மாணவரணி SHAHID

மாணவர் அணியின் பயான் பயிற்சி-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 03-10-2012 அன்று பயான் பயிற்சி நடைபெற்றது இதில் ஏழு பேர் பயிற்சி பெற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்)  
POSTED BY மாணவரணி SHAHID

மக்தப் மதரஸாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-10-2012 அன்று குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
POSTED BY மாணவரணி SHAHID

பெண்களுக்கான மக்தப் மதரஸா-மங்கலம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-01-2012 அன்று முதல் பெண்களுக்கான மக்தப் மதரஸா துவங்கப்பட்டது. இதில் இருபத்தி மூன்று பெண்கள் சேர்ந்துள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)

POSTED BY மாணவரணி SHAHID

மாவட்ட மாணவரணியின் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து நேற்று 07.10.12 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட மாணவரணி செயளாலர் சகோ.S.ஷாஹிது ஒலி அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயளாலர் சகோ.பஷீர் முன்னிலையில் நடைப்பெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் ”இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எப்படி அறிமுகப்படுத்துவது”என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வது குறித்து பயிற்சி வழங்கினார்.அவரை தொடர்ந்து மாநில பேச்சாளர் சகோ.K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ”நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் பிற இயக்கத்தை சார்ந்தவர்கள் எடுத்து வைக்கும் கேள்விகளை எப்படி தர்க்கரீதியாக எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கினார்.இத்ல் 70 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

POSTED BY மாணவரணி SHAHID

Monday 8 October 2012

தெருமுனை பயான்-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-10-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

POSTED BY மாணவரணி SHAHID

Saturday 6 October 2012

மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் தெருமுனை கூட்டம் -பெரியதோட்டம் கிளை
















திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 05-10-2012 அன்று இரவு 7 மனியளவில் தெருமுனை கூட்டம்   பெரியதோட்டம் 4 வது வீதியில் நடைபெற்றது 

மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடைபெற்றது .
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன்  அவர்கள்  "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும் 
சகோ.அப்தூர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள்  "இஸ்லாத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள்"என்ற தலைப்பிலும்  
உரையாற்றினார்கள். 
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.




POSTED BY மாணவரணி SHAHID

Wednesday 3 October 2012

தெருமுனை பிரச்சாராம் _ கோம்பைத்தோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக முஸ்லிம்கள் மத்தியில் கல்வியின் விழிப்புணர்வை உருவாக்க வாரந்தோறும் இஸ்லாத்தின் பார்வையில் கல்வி என்ற் தலைப்பில் தெருமுனை பிரச்சாராம் துவக்கப்பட்டு முதல் கட்டமாக திருப்பூர் கோம்பைத்தோட்டம் பகுதியில் 01.10.2012 அன்று இரவு 08 மணியளவில் நடைப்பெற்றது.இத்ல்  மாவட்ட பேச்சாளர் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
POSTED BY மாணவரணி SHAHID

மாணவரணி _ஆலோசனைக்கூட்டம்-கோம்பைத்தோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக ஆலோசனைக்கூட்டம் 01.10.2012 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள் யாசிர் மற்றும் சதாம் ஹுசைன் முன்னிலையில் நடைப்பெற்றது.
POSTED BY மாணவரணி SHAHID

Tuesday 2 October 2012

குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா-V.K.P.கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளையின் சார்பாக 01-09-2012 முதல் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா நடந்து வருகிறது. இதில் நாற்பது குழந்தைகள் பயின்று வருகிறார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

POSTED BY மாணவரணி SHAHID

Monday 1 October 2012

மாணவர் அணியின் பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 30-09-2012 அன்று பேச்சாளர் பயிற்சியின்  5 வது வகுப்பு நடைபெற்றது. இதில் 7 பேர் பயிற்சி பெற்றனர்(அல்ஹம்துலில்லாஹ்)  


POSTED BY மாணவரணி SHAHID

இணை வைப்பு கூடமான தர்கா அருகில் தெருமுனை கூட்டம்-உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக கடந்த 30-09-2012 அன்று 
தெருமுனை கூட்டம்   இணை வைப்பு கூடமான தர்கா அருகில்  நடைபெற்றது 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் உள்ள தர்காவில் திருவிழா(உருஸ்) மற்றும் 
 ஜமாலி யின் வழிகேடான உரை நிகழ்ச்சி நடைபெற்றது 
அந்த  வழிகெட்ட செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன்  அவர்கள்  "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும் 
சகோ.கோவை ஜாகிர்   அவர்கள்  "இஸ்லாத்தின் பெயரால் வழிகேடுகள்"என்ற தலைப்பிலும்  
உரையாற்றினார்கள். 
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.


POSTED BY மாணவரணி SHAHID

நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள பேனர் தஃவா- மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2012 அன்று நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள என்ற தலைப்பில் பேனர் தஃவா செய்யப்பட்டது இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகத்தை இலவசமாக பெற மாற்று மத சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது இது வரை 5 சகோதரர்கள் புத்தகம் பெற்றுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)


POSTED BY மாணவரணி SHAHID