Monday 10 December 2018

திருப்பூர் மாவட்ட பெண்கள் இஸ்திமா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

திருப்பூர் மாவட்டம் சார்பாக  திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு பல்லடம் மங்கலம் ரோட்டிலுள்ள MC பழனிச்சாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில்
மாபெரும் பெண்கள் இஸ்திமா 9/12/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணி வரை சிறப்பாக நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சியில் மதரஸா குழந்தைகளின் அழகிய கிராஅத்,  பயான்கள், திருக்குர்ஆன் அறிவுரைகளை விளக்கும் நாடகங்கள், மற்றும் திருக்குர்ஆன் வசனங்களை அழகிய முறையில் எழுதிய கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.



மேலும் பெண்களுக்கான தர்பியத் வகுப்புகளை  பெண் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தினார்கள்.

சகோ அபூபக்கர் சஅதி அவர்கள் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பிலும்,

சகோ.சமது MISc., அவர்கள் "திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்?" எனும் தலைப்பிலும், 















இறுதியாக சகோ. அப்துநாசிர் MISc., அவர்கள் "சஹாபிய பெண்களின் முன்மாதிரி" எனும் தலைப்பிலும் பெண்களுக்கான அவசியமான தகவல்களை தொகுத்து வழங்கி சிறப்புரை நிகழ்த்தியது கலந்து கொண்ட பெண்களுக்கு மனநிறைவை தந்தது. 
அல்ஹம்துலில்லாஹ்