Thursday 27 December 2018

திருக்குர்ஆன் மாநாடு ஏன்?எதற்கு? -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (26/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன் மாநாடு ஏன்.எதற்கு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரஞ்சித் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு-

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-12-2018 அன்று மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோ. ரஞ்சித் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் சீனிவாசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்   காங்கயம்  கிளை  சார்பில் 26-12-2018 அன்று சகோதரர் சீனிவாசன் அவர்களின்   இஸ்லாம் குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Monday 24 December 2018

பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  21/12/18 வெள்ளிக்கிழமை அன்று ஆதிதமிழர்பேரவை சேர்ந்த சகோதரர் பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் மாநில மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு திருகுர்ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 23/12/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சுல்தானியா பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. 

இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு _ தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  23/12/18 அன்று மாலை 5:30 மணியளவில்   மஸ்ஜிதுர் ரஹ்மான் 


மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது.  இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளர் யாஸர் அரபாத் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு நிறைகுறைகளை கோட்டறிந்து ஆலோசனை தந்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 22 December 2018

திருக்குர்ஆன் மாநாட்டி ற்கு பெண்களின் பங்களிப்பு* - உடுமலைகிளை பெண்கள் பயான்*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 22/12/18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி ரஹ்மத் ( பல்லடம்) அவர்கள் *திருக்குர்ஆன் மாநாட்டி ற்கு பெண்களின் பங்களிப்பு*என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 19 December 2018

இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* _ உடுமலை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 18-12-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, ஃபஜுலுல்லாஹ் இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

சோமனூர் சகோ. பால்ராஜ் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-12-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ. பால்ராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்
" முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரியின் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் -SVகாலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எஸ். வி. காலனி கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் o+ve1யூனிட்இரத்தம் கலைவாணி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு சகோதரர் கௌத்தம் என்பவரால் 18/12/2018 அன்று அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 17/12/18-அன்று உமேஷ் என்ற சகோதரர் மூலம் o+ ஒரு யூனிட் கஜேந்திரன் என்ற சகோதரருக்கு ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday 18 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் _ VKP




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதலாவதாக மதரஸா மாணவ , மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறகு சகோ. அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? எதற்கு ? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு மாநாட்டிற்கான VKP  கிளையின் தாவா  பணிகளின் விபரங்கள்  மற்றும் வாகன ஏற்பாடுகள் , பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் கிளை நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள்

கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலாக கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

*மறுமை* -அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (16.12.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவராயம்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி அருகில் மற்றும் அடுத்த வீதியிலும் 2 இடங்களில் நடைபெற்றது. 
சகோ. இம்ரான் கான் அவர்கள் *மறுமை* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
 அல்ஹம்துலில்லாஹ்.

"பின்பற்ற தகுதிஉடையவர் யார்" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக17:12:18திங்கள் அன்று சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ:அப்துல்வஹாப் அவர்கள் "பின்பற்ற தகுதிஉடையவர் யார்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday 15 December 2018

மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
14/12/2018 அன்று மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும், மாவட்டத்தில் வருங்கால தாவா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

மாநில செயலாளர் நெல்லை பைசல் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பல்லடம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக 14.12.18 ஜூம்ஆக்கு பிறகு மசூரா நடை பெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர் கிளை பொருப்பாளர் ரஷீத் பாய் அவர்களால் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை தரப்பட்டது. 

ஜனவரி 27 மாநாடு பணிகள் விரிவுப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வீடு வீடாக சென்று தாஃவா குழு பெண்கள் மூலம் மார்க்க விளக்க விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுப்பதுஎன்றும்,   மாநாடு பஸ் புக் செய்தல் மற்றும் தாஃவா பணி அதிகப்படுத்துதல் பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

அவசர இரத்ததானம் -svகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 14/12/18 சனிக்கிழமை அன்று சகோதரர் மூலம் B+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 15/12/18 சனிக்கிழமை அன்று கீதாஞ்சலி என்ற சகோதரிக்கு அஸ்கர் என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி -அனுப்பர்பாளையம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/12/2018, அன்று கிளையில் நடைபெறும் மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்த தானம் _அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15-12-2018 -அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் AB+ POSITIVE இரத்தம் 1 யூனிட் கீதாஞ்சலி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக சகோதரர் அஸ்ரப் அலி என்பவரால்  அவசர இரத்தத் தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 12 December 2018

வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆன் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக  11-12-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ, முஹம்மது அலி ஜின்னா வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 11 December 2018

சகோதரர்.கணேசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 10-12-2018 அன்று இடுவம் பாளையம் பகுதியை *கணேசன்* என்ற *பிறமத* சகோதரரின்
*இஸ்லாம்* குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து மேலும் *திருக்குர்ஆன்* *தமிழாக்கம்* அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

நாங்கள் சொல்வது என்ன -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday 10 December 2018

திருப்பூர் மாவட்ட பெண்கள் இஸ்திமா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

திருப்பூர் மாவட்டம் சார்பாக  திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு பல்லடம் மங்கலம் ரோட்டிலுள்ள MC பழனிச்சாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில்
மாபெரும் பெண்கள் இஸ்திமா 9/12/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணி வரை சிறப்பாக நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சியில் மதரஸா குழந்தைகளின் அழகிய கிராஅத்,  பயான்கள், திருக்குர்ஆன் அறிவுரைகளை விளக்கும் நாடகங்கள், மற்றும் திருக்குர்ஆன் வசனங்களை அழகிய முறையில் எழுதிய கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.



மேலும் பெண்களுக்கான தர்பியத் வகுப்புகளை  பெண் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தினார்கள்.

சகோ அபூபக்கர் சஅதி அவர்கள் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பிலும்,

சகோ.சமது MISc., அவர்கள் "திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்?" எனும் தலைப்பிலும், 















இறுதியாக சகோ. அப்துநாசிர் MISc., அவர்கள் "சஹாபிய பெண்களின் முன்மாதிரி" எனும் தலைப்பிலும் பெண்களுக்கான அவசியமான தகவல்களை தொகுத்து வழங்கி சிறப்புரை நிகழ்த்தியது கலந்து கொண்ட பெண்களுக்கு மனநிறைவை தந்தது. 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday 9 December 2018

திருக்குர்ஆன் ஆங்கில மொழி விளக்கம் _மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   சார்பில் நடைபெறும் திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  8-12-2018அன்று  மங்கலம்கிளை மதரஷா மாணவன் அம்மார்  திருக்குர்ஆன் வசனத்தை ஆங்கில மொழியில் அர்த்தத்தோடு ஓதும் வீடியோ  
அல்ஹம்துலில்லாஹ்

Saturday 8 December 2018

பெண்கள் இஜ்திமா ஏன் - அலங்கியம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக பள்ளியில்  7/12/2018, அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது. 

இதில் பெண்கள் இஜ்திமா ஏன்  என்ற தலைப்பில் சகோதரி உறையாற்றினார். அல்ஹம்ந்துலில்லாஹ்

அழகிய முறையில் அரபி எழுதும் பயிற்சி




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் மதரஸா மாணவிகள் ஹாஜரா பேகம் மற்றும் சலாமத் அவர்களின் அழகிய முறையில் அரபி எழுதும் படைப்புகள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக வெள்ளிகிழமை (07-12-2018) அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில் மாவட்ட துணைச் 
செயலாளர்   சகோ:அப்துல்ரஷீத்   அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.

கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை  வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய  பல ஆலோசனை வழங்கப்பட்டது.
      அல்ஹம்துலில்லாஹ்

Friday 7 December 2018

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் 06/12/2018 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் இன்ஷாஅல்லாஹ் 9/12/2018 அன்று பல்லடத்தில் நடைபெறவுள்ள பெண்கள் இஜ்திமா பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday 3 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்


திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட


வரும் 2019 ஜனவரி 27  மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.


அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள்,  கருத்துக்களை பெற்று செயல்படுத்த,




02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை 



திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில்  நடைபெற்றது.




02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்  
மங்கலம் கிளை மர்கஸில்  நடைபெற்றது.






02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல் 






உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.














மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம்  அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர்.  சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும், 


கலந்து கொண்டு


நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு,  மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்