Monday 28 January 2013

இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா _தாராபுரம் _28012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பில் 28.01.2013 அன்று தாராபுரம் பகுதி பெரியவர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து தாயத்து கயறு அறுத்து எடுக்கப்பட்டது.

"பகிரங்க அறைகூவல் " போஸ்டர் _மங்கலம் _23012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-01-2013 அன்று பகிரங்க அறைகூவல் என்ற போஸ்டர் மங்கலம் பகுதியில் ஒட்டப்பட்டது

மவ்லித் ஓர் ஆய்வு _தெருமுனை பயான் _மங்கலம் _24012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 24-01-2013 அன்று R.P.நகர்
பகுதியில் மாலை 07:00 மணி08:00 முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்

மவ்லித் ஓர் ஆய்வு _பெண்கள் பயான் _மங்கலம் _25012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை R.P. நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்

முஸ்லிம் பெண்களின் நிலை _பெண்கள் பயான் _மங்கலம்கோல்டன் டவர் _26012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 26-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி மும்தாஜ் அவர்கள் "முஸ்லிம் பெண்களின் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுவதை தடுக்க மாவட்ட மேயரை சந்தித்து மனு _திருப்பூர் மாவட்டம் _28.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்   
28.01.2013 திங்கள் அன்று   திருப்பூர் மாவட்ட மேயர் சகோதரி .விசாலாட்சி அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து திருப்பூர்மாவட்டத்தின் பெரிய தோட்டம், காங்கேயம்ரோடு  உட்பட பல பகுதிகளில் , வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுவதை தடுக்க வேகதடை அமைக்கவும் ,மற்றும் போக்குவரத்து காவலர்களை கொண்டுசாலை போக்குவரத்தை சீரமைக்கஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கர்பப்பை கட்டி அறுவைச்சிகிச்சைக்காக மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _27012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.01.2013 அன்று திருப்பூர் M.K.M. ரைஸ் மில் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த சகோதரி. ஆரிப் நிஷா  அவர்களின்  கர்பப்பை கட்டி அறுவைச்சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பிறமத சகோதரருக்கு மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _27.01.2013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.01.2013 அன்று பெருமாநல்லூர் தாலுகா நெருப்பெருச்சல் பகுதியை சேர்ந்த பிறமதசகோதரர். ரங்கசாமி  அவர்களின் இருதய கட்டி அறுவை சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _28.01.2013

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் 
மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு ஞாயிறு காலை 10:00 மணிமுதல்1:00 மணி வரை   நடைபெற்றுவருகிறது .
27.01.2013 அன்று   10 ஆவது வாரம்  பேச்சாளர்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை கண்டன பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு _உடுமலை _27.01.2013



 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை அலுவலகத்தில் 27.01.2013 அன்று இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்த
விஸ்வரூபம் சினிமா வை கண்டித்தும் மற்றும் இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பத்திரிக்கைகளை   கண்டித்தும் நடந்த  சென்னை கண்டன
பொதுக்கூட்டத்தை   நேரடி ஒளிபரப்பு    செய்யப்பட்டது . இதில்  சகோதர,சகோதரிகள்  ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

"சாதித்துகாட்டுவோம்" மாணவ மாணவியர்களுக்காக தன்னம்பிக்கைநிகழ்ச்சி _கோம்பைதோட்டம் _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பைதோட்டம் கிளை சார்பில்
27.01.2013 ஞாயிறுஅன்று
காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை
     
திருப்பூர்நொய்யல்வீதி
M.K.M.ரைஸ்மில்காம்பவுண்ட்இல் சாதித்துகாட்டுவோம் எனும் நிகழ்ச்சி 10, +2 படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?...
போன்ற மேலும் பல சந்தேகங்களுக்கு விடை அளித்து


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சகோ.சமீம் , சகோ.சாஹிதுஒலி மற்றும் திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமைஆசிரியர் .சகோதரி.உஷா தேவிஆகியோர்
தன்னம்பிக்கை ஊட்டி மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெற
ஊக்கம் அளிக்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இஸ்லாத்தின் பார்வையில் அணுமதி பெறுதல் _காலேஜ்ரோடு _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக  27.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு G.K.கார்டன்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.குர்ஷித்பானு  அவர்கள்
"இஸ்லாத்தின் பார்வையில் அணுமதி பெறுதல் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.