Wednesday 19 April 2017

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

** முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு** நிதியுதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளை சார்பில்** முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு** வரவு,செலவில் மீதி தொகை ரூ. 23369/= ஐ     மாவட்ட நிர்வாகம் வசம் 19/04/2017 அன்று மாநாடு செலவினங்களுக்காக ஒப்படைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம்- தாராபுரம் கிளை


tntj திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,19/4/17(புதன்)அன்று தாராபுரம் அரசு மருத்துவ மணையில் பாணு என்கின்ற சகோதரி அவர்களுக்கு  A +ve  இரத்தம் 1 யூனிட் வழங்கப்பட்டது.(பிரசவத்திற்க்கு),அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 19-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து  அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  தக்பீர் தஹ்ரிமா என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 19-04-17  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள்எனும் புத்தகத்தில்  தொழுகையின் முக்கியத்துவம் என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19-04-17 அன்று சுபுஹு தொழுகைக்குப்  பின் அறிவும் அமலும்  நிகழ்வில் பெண்களைத் தொட்டால் உளு நீங்குமா? என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-04-2017 அன்று கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர்  1000 லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



TNTJ TIRUPUR செரங்காடு கிளை மஸ்ஜிதுல் சலாம்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 19-04-20047 அன்று சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சிஹாபுதீன் அவர்கள் ** அழிக்கப்பட்ட சமுதாயம்

** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பிறர்ரிடம் இருந்து நமக்கு ஏற்படும் தீமைகளை பொறுத்து கொள்வதினால் ஏற்படும் நன்மை களை பற்றி )விளக்கமளித்து  உறையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

திருப்பூர் மாவட்டம்,மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை,நாள்: 17- 02- 2017

TNTJ TIRUPUR செரங்காடு கிளை மஸ்ஜிதுஸ் சலாம் ஜும்ஆ உரை,

TNTJ TIRUPUR செரங்காடு கிளை மஸ்ஜிதுஸ் சலாம் ஜும்ஆ உரை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 18-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாவட்ட மாநாடு வரவு செலவு கணக்குகள் போக மீதம் உள்ள தொகை ரூபாய் 3291 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  18-04-2017 அன்று அவசர கிளை மசூரா நடைப்பெற்றது, இதில் கிளையில் தாவா பணிகள் வீரியமாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 


பிறமத தாவா - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 18/04/17 அன்று பிறமத சகோதரர் கார்த்திக் என்பவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ரேவதி மருத்துவ மனையில் 18/4/2017 அன்று  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர்- நந்தக்குமார், வாங்கியவர்- பாத்திமா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்