Saturday 18 October 2014
பேச்சுப் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-10-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பிலால் என்ற சகோதரர் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
உடுமலையில் 3 கிளைகளின் செயற்குழு ....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை, மடத்துக்குளம் கிளை, ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 15.10.2014 அன்று "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார செயற்குழு" உடுமலையில் நடைபெற்றது. சகோதரர்.யாஸர் அராபத் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக எப்படி எல்லாம் வீரியமாக பிரச்சாரம் செய்வது என்று விளக்கம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-10-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் வரலாறு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் இதில் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்து உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)