Wednesday 6 March 2013

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை _05032013

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
05.03.2013
அன்று  வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் 
பழனி சகோதரர். நாசர்தீன் அவர்களுக்கு ரூ5,000/=
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

"பித் அத் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _05032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 05.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சபியுல்லாஹ்    அவர்கள் "பித் அத் " (நவீன வழிகேடு ) எனும் தலைப்பில் உரையாற்றினார்.

மாணவர்களுக்கு இலவச டியூசன் _திருப்பூர் மாவட்ட மாணவரணி _03032013

TNTJ திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் திருப்பூர் மாவட்ட தலைமையகத்தில் 03.03.2013முதல் தினமும்  மாலை 06.30 முதல் 08.00 வரை 10மற்றும்12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் நடைபெறுகிறது. 

 

முஃமீன்களின் பண்புகள் _பெண்கள் பயான் _மங்கலம் _04032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 04-03-2013 அன்று மங்கலம் கிடங்கு தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 



இதில் சகோதரி. ஃபாஜிலாஅவர்கள்  முஃமீன்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் 
சகோதரி.ஹாஜிராஅவர்கள் மரணசிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட பித்அத்" _பெண்கள்பயான் _வெங்கடேஸ்வரா நகர் _ 03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 03.03.2013 அன்று மாலை வெங்கடேஸ்வரா நகர் மதரசதுத்தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் சகோ.ஜெய்லானி பிர்தவ்சி அவர்கள்


"இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட பித்அத்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன்
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.