Monday 18 November 2013

பழனி மார்க்க விளக்க பொது கூட்ட செலவினங்களுக்காக ரூ.6600/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
17.11.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொது கூட்ட செலவினங்களுக்காக ரூ.6600/= நிதியுதவி வழங்கப்பட்டது

"திருக்குர்ஆனின்சிறப்புகள் " _மங்கலம்R.P.நகர்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்R.P.நகர்கிளை யின் சார்பாக 18.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிராஜ் அவர்கள் "திருக்குர்ஆனின்சிறப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மடத்துக்குளம்கிளை _உணர்வு விற்பனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 15.10.2013 அன்று ஜூம்மாவுக்கு பிறகு உணர்வு - 40 இதழ் பொதுமக்களிடம் விற்பனை  செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருட்டு ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் திருட்டு ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தமிழகஅரசே! நடவடிக்கை எடு!! _ போஸ்டர் மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 15.11.2013 அன்று   தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
அதிமுக இணையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது  
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.

வடுகன்காளிபாளையம் கிளை _குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 17.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  

பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம்  19:60 வசனம் முதல்  19:80 வசனம்வரை  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி "_மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16.11.2013 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள்  "அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகசெலவினங்களுக்காகரூ.420/= நிதியுதவி _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தாவா மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 08-11-2013 அன்று ஜும்ஆ வசூல் செய்த ரூ.420/= நிதியுதவி வழங்கப்பட்டது