Monday 19 August 2019

மாபெரும் இரத்ததான முகாம் - மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக...

18.8.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மங்கலம் பகுதியில் நடைப்பெற்றது.

இம்முகாமை மாவட்ட மருத்துவணி செயலாளர் ஜாஹிர் துவக்கிவைத்தார். 

மங்கலம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் 100 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானம் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை மங்கலம் கிளை நிர்வாகிகள் சிராஜ், நஜீர், அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை ஓங்கி ஒலிக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _ வடுகன்காளி பாளையம் கிளை

                 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக 

18/08/2019 அன்று மாலை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

            முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி
                    வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் நடைபெற்றது.

இதில் சகோ. M.S சுலைமான்  (TNTJ - மேலாண்மைக்  குழு தலைவர்) அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் _ காலனி கிளை தெருமுனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SVகாலனி கிளை சார்பாக 



18/08/2019 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

சகோ. இம்ரான் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ.அபூபக்கர் சித்தீக் சஅதி அவர்கள் சுதந்திரபோரில் முஸ்லிம்களின் பங்களிப்பும் தியாகமும் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்