Sunday 6 January 2019

ஃப்ளெக்ஸ் தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள முக்கிய இடங்களான பள்ளிவாசல் வீதி, கடைவீதி, ஈத்ஹா நகர் மற்றும் பேக்கரி எதிரில்  திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய மாநாடு அழைப்பு ஃப்ளெக்ஸ்  நான்கு இடங்களில் வைக்கப்பட்டது.
( ப்ளெக்ஸ் -5*6 = 4 ப்ளெக்ஸ்)

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் மாநில மாநாடு பிளக்ஸ் போர்டு அமைத்தல் _ காதர் பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ் 27-1-2019 அன்று நடைபெற உள்ள திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அறிவிப்பு பலகைகள் (பிளக்ஸ் போர்டு) 
காதர் பேட்டை கிளையின் சார்பாக பொதுமக்கள்  சந்திக்கும் பகுதிகளில் 15 இடங்களில் அமைக்கப்பட்டது.

செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது 

சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள்  முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநாட்டிற்கு கம்ப போஸ்டர் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மாணவரணி சார்பாக இரண்டாம் கட்டமாக திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு கம்ப போஸ்டர் ஓட்டப்பட்டது. 

திருக்குர்ஆன் மாநாடுக்கு மக்களுக்கு அழைப்பு -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (6/1/2018) அன்று திருக்குர்ஆன் மாநாடுக்கு ம்க்களை அழைப்பதற்காக இரண்டாம் கட்டமாக செல்லப்பட்டது

அதில் 50.மேற்பட்ட வீடுகளுக்கு சென்று அழைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

காதர் பேட்டை கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டை  கிளையின் சார்பாக 6-1-2019 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள மங்கலம் காம்பவுண்டில் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அழைப்பது  சம்பந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது.

இலவச புக்ஸ்டால் -காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 6.1.2019 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.



பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மற்றும் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அழைப்பு நோட்டீசு வழங்கப்பட்டது.

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மெகா போன் பிரச்சாரம் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகப்படுத்துவோம் என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள 9 ஒன்பது இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் வடுகன்காளிபாளையம் கிளை மதரஸா மாணவ மாணவியர்கள் குர்ஆனை அனைவரும் ஓதுவோம் என்ற அடிப்படையில் 9 ஒன்பது இடங்களில் பயானுக்கு முன்னதாக அழகிய முறையில் கிராஅத் ஓதினார்கள்.

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக அழைப்பும் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, அஷ்ரப் என்ற மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்.   
பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் அதிகமானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

பிறமத சகோதரர்களுக்கு திருகுர்க்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ஹவுசிங் யூனிட் கிளை* யின் சார்பாக 5/1/2019-  பிறமத சகோதரர்களுக்கு திருகுர்-ஆன் தமிழாக்கம் வழங்கும் தாவாவில் 

பாரதி விகாஸ் பள்ளி முதல்வர் அவர்களுக்கும் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் மளிகைக்கடை நடத்திவரும் தங்கவேல் அவர்களுக்கும்  வழங்கப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்..