Sunday 1 December 2013

பெரியவர்களுக்கான மதரசா -கோம்பைத் தோட்டம் கிளை



TNTJ கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 26/11/2013 அன்று முதல் பெரியவர்களுக்கான
மதரசா துவங்கப்பட்டது. குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்ள சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

"சாபமிடுதல் " _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 25.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "சாபமிடுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

வேகத்தடை அமைக்கக்கோரி மனு _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால்  வேகத்தடை அமைக்கக்கோரி 42வது வார்டு கவுன்சிலர் நஜ்முதீன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது

"ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" கோம்பைத் தோட்டம் கிளை போஸ்ட்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் திருப்புர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக25.11.2013 அன்று பொதுமக்கள் கவனிக்கும் பகுதிகளில்  "ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" என்கின்ற தலைப்பில்மஹர் பற்றிய திருக்குர்ஆன் வசன போஸ்ட்டர்   100 ஒட்டி தாவா செய்யப்பட்டது.

அழைப்பு பணியில் பெண்களின் பங்கு _பெண்களுக்கான தர்பியா _கோம்பை தோட்டம் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 24/11/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி குர்ஸித் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் 
சகோதரி பாஸிலா அவர்கள் தனி மனித ஒழுக்கம் என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 
இதில் 70ற்கும் மேற்ப்பட்ட

சகோதரிகள் கலந்துகொண்டனர்