Monday 1 October 2012

மாணவர் அணியின் பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 30-09-2012 அன்று பேச்சாளர் பயிற்சியின்  5 வது வகுப்பு நடைபெற்றது. இதில் 7 பேர் பயிற்சி பெற்றனர்(அல்ஹம்துலில்லாஹ்)  


POSTED BY மாணவரணி SHAHID

இணை வைப்பு கூடமான தர்கா அருகில் தெருமுனை கூட்டம்-உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக கடந்த 30-09-2012 அன்று 
தெருமுனை கூட்டம்   இணை வைப்பு கூடமான தர்கா அருகில்  நடைபெற்றது 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் உள்ள தர்காவில் திருவிழா(உருஸ்) மற்றும் 
 ஜமாலி யின் வழிகேடான உரை நிகழ்ச்சி நடைபெற்றது 
அந்த  வழிகெட்ட செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன்  அவர்கள்  "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும் 
சகோ.கோவை ஜாகிர்   அவர்கள்  "இஸ்லாத்தின் பெயரால் வழிகேடுகள்"என்ற தலைப்பிலும்  
உரையாற்றினார்கள். 
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.


POSTED BY மாணவரணி SHAHID

நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள பேனர் தஃவா- மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2012 அன்று நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள என்ற தலைப்பில் பேனர் தஃவா செய்யப்பட்டது இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகத்தை இலவசமாக பெற மாற்று மத சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது இது வரை 5 சகோதரர்கள் புத்தகம் பெற்றுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)


POSTED BY மாணவரணி SHAHID