Tuesday 6 August 2013

உடுமலைகிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில், 05.08.2013  அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்   இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்   நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர். சகோதரர். H.M.அஹமது கபீர்   அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.....

"லைலத்துல்கத்ர் 27 ல் மட்டுமா? " _உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

04.08.2013 அன்று  "லைலத்துல்கத்ர் 27 ல் மட்டுமா? " எனும் தலைப்பில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஆனைமலை கிளைக்கு ரூ.2,00,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில், 04.08.2013  அன்று கோவை மாவட்டம் ஆனைமலை கிளைக்கு  (பள்ளிக்கு புதிய இடம் வாங்கியதில், அவசர தேவைப்பட்ட) ரூ.2,00,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.  

ஃபித்ராவின் சட்டங்கள்-2 _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஃபித்ராவின் சட்டங்கள்-2" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

"ஷிர்க்,பித்அத்" காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 03.08.2013 அன்று G.K.கார்டன்பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி குர்ஷித்பானு ஆலிமா அவர்கள் "ஷிர்க்,பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.