Tuesday 18 November 2014

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.பிலால் மற்றும் சகோ. பஷீர் அலீ ஆகியோர் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை தங்களது உரையின் மூலம் விளக்கினர். அல்ஹம்துலில்லாஹ்...


பல்லடம் கிளை சார்பாக 500 நோட்டிஸ்கள்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக  14.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? எனும் தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 500 நோட்டிஸ்கள் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக  13.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? எனும் தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 08.11.14 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், சாதிக் எனும் சகோதரர் ஒருவருக்கு பிறை ஓர் ஆய்வு எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 10.11.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 10.11.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது? எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளிவாசலுக்கு இடம் வாங்க உதவி ரூ.2500 - தாராபுரம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 16-11-2014 அன்று  காங்கயம் கிளைக்கு "பள்ளி வாசல் இடம் வாங்க ரூபாய். 2500 /- நிதி உதவி செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 6 பேனர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/11/14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக  முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு 6×10 என்ற அளவுகளில் 6 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
 


மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக 20 போஸ்டர் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13/11/14 அன்று மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக 20 போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 130 உணர்வு பேப்பர்கள் விற்பனை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 14/11/14  அன்று ஜும்ஆ விற்கு பிறகு  உணர்வு வார பத்திரிக்கை 130 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

35 தீன்குலப் பெண்மணி மாத இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 14/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு தீன்குலப் பெண்மணி மாத இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..