Saturday 20 July 2013

"இறையச்சம்" மங்கலம் கிளை மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 19-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள் " _உடுமலைகிளை தொடர்பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொள்கின்றனர்.

19.07.2013 அன்று  "ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள்  " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"இரட்டிப்பு மகிழ்ச்சி" _மார்க்க விளக்க பயான் திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  20.07.2013 அன்று மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமதுல்லாஹ்அவர்கள் "இரட்டிப்பு மகிழ்ச்சி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19.07.2013 அன்று  மர்கசுக்கு வந்த சகோதரரிடம் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து,அவர் கட்டியிருந்த இணை வைப்பு கயறுகள்    அகற்றப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் முருகன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 19.07.2013 அன்று   பிறமத சகோதரர்.முருகன் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுகேற்ற மார்க்கம்,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர்நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிரம்மரிஷி வீரமணி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.07.2013 அன்று மடத்துக்குளம் பிறமத சகோதரர்.பிரம்மரிஷி  வீரமணி  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.