Wednesday 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ எம்.எஸ்.நகர்.கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று நபிவழிப்படி திடலில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது.











இந்தத் தொழுகையில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.  இதில், சகோ.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி ரூ.2022 _ வி.கே.பி. கிளை



 திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளையின் சார்பாக 11-07-14  அன்று மாநில தலைமைக்கு நிதியுதவி அளிக்க ஜும்ஆ வசூல் தொகை ரூ.2022/-  மாவட்டத்திடம் வழங்குமாறு ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர்  கிளை சார்பாக 28-07-14  அன்று 25  ஏழை குடும்பங்களுக்கு  ஃபித்ரா தர்மம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பள்ளிவாசல் கட்டிட உதவி _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14  அன்று மங்கலம் கோல்டன் டவர் கிளையின் பள்ளிவாசல் கட்டிட உதவிக்காக ரூ.5,152  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ வி.கே.பி.கிளை

திருப்பூர் மாவட்டம்  வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 29-07-2014  அன்று நோன்பு பெருநாள்  தொழுகை  தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் ஏற்பாடு நடைபெற்றது. 
இதில், சகோ.அன்சர்கான் M.I.SC அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏராளாமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்..

55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ வி.கே.பி. கிளை

 திருப்பூர் மாவட்டம், வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக  28.07.14  அன்று நோன்பு பெருநாள் தர்மமான பித்ரா தொகையை வசூலித்து 54 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா கொடுக்கப்பட்டது. 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.250  மதிப்புள்ள பித்ரா பொருள் மற்றும் இறைச்சிக்காக ரூ.200 தனியாக வழங்கப்பட்டது. 


மேலும் , கடைசியாக பித்ரா வந்ததால் இரண்டு  ஏழைக் குடும்பக்களுக்கு பணமாக ருபாய் 1020 /- கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

கிளை சார்பாக வசூலித்த மொத்த தொகை = ரூ .15320/-

மாவட்டத்திலிருந்து வந்த தொகை       =  ரூ .10000/-

மொத்த தொகை            = ரூ.25320/-

பரிசளிப்பு நிகழ்ச்சி _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14  அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 











ரமலான் மாதத்தில் பொது மக்களிடம் 30 கேள்விகள் கேட்கப்படிருந்தது. அதற்கு சரியான பதில்களை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 



அல்ஹம்துலில்லாஹ்





நோன்பு பெருநாள் தொழுகை _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14 அன்று நபி வழிப்படி திடலில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலிலாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ மடத்துக்குளம் கிளை



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்   ARM  மண்டப  திடலில் 29.07.14 காலை 8.30 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை  நடைபெற்றது.



தொடர்ந்து, சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்  சொர்க்கத்தை பெற?எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்...

175 ஏழைகளுக்கு விநியோகம் _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.07.14 அன்று 175 ஏழைகளுக்கு ரூ.141 மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப் பொருள்கள் நபிவழியில்  ரமலான் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.







கிளையில் வசூல் :  ரூ. 4675 /-

மாவட்டம் வழங்கியது : ரூ.20000 /-

மொத்த  வரவு : ரூ. 24675 /-

 175 ஏழைகளுக்கு * ரூ.141 மதிப்புள்ள பொருள்கள்  

மொத்த ஃபித்ரா விநியோகம்      ரூ.24675 /-

அல்ஹம்துலில்லாஹ்....


190 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 27.07.2014  அன்று 190 ஏழைகளுக்கு ரூ.169/- மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப்பொருள்கள் + ரூ.1950/-  நபிவழியில்  ரமலான் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

கிளை வசூல் : ரூ. 24060/-
மாவட்டம் வழங்கியது  : ரூ.10000/-
மொத்த  வரவு : ரூ. 34060/-

190ஏழைகளுக்கு*  ரூ.169 : ரூ.32110/-
பணமாக வழங்கியது:   ரூ. 1950/-


மொத்தம் பித்ரா விநியோகம் : ரூ.34060/=

அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு பெருநாள் தொழுகை _ உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத் தக்வா மர்கஸ் எதிரில் உள்ள தக்வா திடலில் 29.07.2014 காலை 8.15 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை  நடை பெற்றது. 







தொடர்ந்து சகோ. ஆஜம் அவர்கள்  ரமலான் தரும் படிப்பினை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.  
அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 27.07.14  அன்று ரமளான் இரவு பயனை அடுத்து மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்றது. இதில், சரியாக பதிலளித்த சகோதரருக்கு சொர்க்கம் நரகம் எனும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 27.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 27.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர்(ரலி) வரலாறு குறித்து தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..