Sunday 28 December 2014

"தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரவிளைவுகள் _திருப்பூர் மாவட்ட செயற்குழு



  திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.12.2014 அன்று  மாவட்ட செயற்குழு திருப்பூர் மாவட்ட மர்கஸில்  கிளை நிர்வாகிகள்,  பிரச்சாரகர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கலந்து கொண்டு நடைபெற்றது.
 
               மாநில செயலாளர் சகோ.கோவை M.அப்துர்ரஹீம் அவர்கள்,
 நம் ஜமாஅத் சார்பில் கடந்த அக்டோபர்  15 முதல் நவம்பர்15 வரை ஒரு மாதம் செய்த "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" ஏற்படுத்திய விளைவுகளை பட்டியலிட்டு, இது போன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியங்களையும்,  வழிமுறைகளையும் விளக்கினார்.

                  கிளை நிர்வாகிகளிடம் இந்த பிரச்சாரம் செய்ததில்  ஏற்பட்ட அனுபவங்களை  கேட்கப்பட்டது.

             இந்த பிரச்சாரம்  எளிதாக தூய இஸ்லாத்தினை பிறமக்களுக்கு எடுத்து சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியது என்றும், 

                      அரசுதுறை அதிகாரிகள், பல்வேறு பிரமுகர்களின்  இஸ்லாத்தினை பற்றிய தவறான கண்ணோட்டத்தை போக்கும் வகையில்   அமைந்தது என்றும், 

     பல்வேறு கோணத்தில் கருத்து தெரிவித்தனர். 
    
    மாவட்ட பிரச்சாரகர்கள்  பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான  சகோ.முஹம்மது சலீம் அவர்கள் மாவட்ட பிரச்சாரகர்கள், மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு வருங்காலத்தில் நடைமுறைபடுத்த அவசிய ஆலோசனைகளை விளக்கினார்.  

   தொடர்ந்து மாநிலமேலாண்மைகுழு உறுப்பினர் சகோதரர். M.S.சுலைமான் அவர்கள் "நிர்வாகிகள், பிரச்சாரகர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள்" பற்றியும், முக்கியமாக தற்கால நவீன பிரச்சார கருவிகளான பேஷ்புக், வாட்சாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஒழுங்குகள் பற்றியும்   வருங்காலத்தில்  பிரச்சாரத்தை வீரியமாக செய்ய பல்வேறு ஆலோசனைகளையும் அழகாக எடுத்து சொல்லி உரையாற்றினார்கள். 
   மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட அப்பாஸ்அலி நீக்கம் ஏன்? என்ற DVD மற்றும்  சகோ.அல்தாபி எழுதி வெளியான  "முஸ்லிம் தீவிரவாதிகள்...??? புத்தகங்கள், புத்தகங்கள்(800) கிளைநிர்வாகிகள்  மற்றும் பிரச்சாரகர்களுக்கு,  பகிர்ந்து  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது _கோல்டன் டவர் கிளைதஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-12-2014 அன்று ஒருவரிடம் இணைவைப்பு பற்றி   தஃவா செய்து அவரின் கையில் இருந்த இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது

பாங்கு சொல்பவருக்குரிய மறுமை சிறப்புகள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் பாங்கு சொல்பவருக்குரிய மறுமை சிறப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தாவா செய்து இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக  27.12.14 அன்று ஒரு சகோதரரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

மவ்லித் பற்றிய ஆடியோ _கோல்டன் டவர் கிளைதெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-12-2014 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது