Sunday 5 April 2015

"அண்டை வீட்டாரிடம் நடக்க வேண்டிய முறைகள் " பல்லடம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 05.04.2015அன்று மஹ்ரிபுக்கு பிறகு அண்ணா நகர் தீயணைப்பு நிலையம் முன்பு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்  பிலால் அவர்கள் "அண்டை வீட்டாரிடம் நடக்க வேண்டிய முறைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்" _மார்க்க அறிவு கலந்துரையாடல் -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு "உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்"   பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
 உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்  பற்றி சந்தேகங்கள் நபி வழியில் தொழுகை சட்டங்கள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி தெளிவு பெறப்பட்டது..  அல்ஹம்துலில்லாஹ்..

51 பிறமத சகோதரர்களுக்கு 40 புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை









திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று 51 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 20 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 20 புத்தகங்கள் ,முஸ்லிம் தீவிரவாதிகள் ......? 4 இலவசமாக வழங்கப்பட்டது

" மனிதர்களுக்கு தீங்கு செய்யாதீர் " வடுகன்காளிபாளையம் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 5.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோதரர் யாஸர் அவர்கள் " மனிதர்களுக்கு தீங்கு செய்யாதீர் " எனும் தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

"சொற்பொழிவு பயிற்சி " _பெரியகடைவீதி கிளைதர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 05-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அவர்கள்  மாணவ மாணவியருக்கு "சொற்பொழிவு பயிற்சி " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

இணைவைப்பு பொருள் ( தகடு படம் ) அகற்றம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 05.04.2015 அன்று ஒரு வீட்டில் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவர்களிடம் இருந்த  இணைவைப்பு பொருள்  ( தகடு  படம் ) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்

"பெருமை ஷைத்தானின் குணம் " - பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 03-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அவர்கள் "பெருமை ஷைத்தானின் குணம் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

35 பிறமத சகோதரர்களுக்கு 15புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை









திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று 35 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 8 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 3 புத்தகங்கள் , முஸ்லிம் தீவிரவாதிகள் ......? 4 இலவசமாக வழங்கப்பட்டது

அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 05-04-15 அன்று  ஃபஜ்ர்   தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

4இணைவைப்பு பொருள்கள் (3 கறுப்பு கயிறு , 1தகடு) அகற்றம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 04.04.2015 அன்று 3சகோதரர்களுக்கும், 2சகோதரிகளுக்கும்   மூடநம்பிக்கை குறித்த தாவா செய்து அவர்களிடம் இருந்த  5இணைவைப்பு பொருள்கள் (4 கறுப்பு  கயிறு , 1தகடு) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.




பெரியதோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.5825/= நிதியுதவி _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை  சார்பில் 04.04.2015. அன்று திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை மர்கஸ் பணிக்காக ரூ.5825/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரர்.சக்திவேல் _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு கிளை சார்பாக 04.04.2015 அன்று  சகோதரர்.சக்திவேல் அவர்கள்     இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு  தனது பெயரை அப்துர்ரஹ்மான் என்று  மாற்றிக்கொண்டார்.. 
 அவருக்கு மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம் அவர்கள்
 இஸ்லாமிய அடிப்படை விசயங்கள் பற்றி  விளக்கம் வழங்கினார்கள்,
 கிளை நிர்வாகிகள் திருகுர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்...
  அல்ஹம்துலில்லாஹ்....

அந்நஸ்ர் -- உதவி _G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 05-04-15 அன்று  ஃபஜ்ர்   தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் "அந்நஸ்ர்  -- உதவி "என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிறு நேரத்தில் அதிக நன்மை - Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று  ஃபஜ்ர்   தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சிறு நேரத்தில் அதிக நன்மை "என்ற தலைப்பில் உரையாற்றினார்

" வேதமுடையோர்" _ திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் சார்பாக 05.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " வேதமுடையோர்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

கணியூர் சுன்னத் ஜமாஅத் மதரசா இமாமிடம் தனிநபர் தாவா _மடத்துக்குளம் கிளை

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 04.04.2015 அன்று  கணியூர்  சுன்னத் ஜமாஅத் மதரசா இமாம் அபூபக்கர் சித்தீக்  அவர்களுக்கு   இஸ்லாத்தின் அடிப்படைகள்  குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது.. 
அல்ஹம்துலில்லாஹ்

இறைவன் முன் நிற்கும் நாள் _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-04-15 அன்று  ஃபஜ்ர்   தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இறைவன் முன் நிற்கும் நாள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"கிரகணமும் நபிவழியும் " _ Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கிரகணமும் நபிவழியும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

தர்கா வழிபாடு, தகடு,மற்றும் தாயத்து இணைவைப்பு _15 ப்ளெக்ஸ் பேனர்கள் _தாராபுரம் நகர கிளை




திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  நகர கிளை சார்பாக 4-4-2015 அன்று நகரின் முக்கிய பகுதிகளில் தர்கா வழிபாடு, தகடு,
மற்றும் தாயத்து இணைவைப்பு எனும் அல்குர்ஆன் ,ஹதிஸ் களுடன் கூடிய ப்ளெக்ஸ் பேனர்கள்  15 (4*2*15= 120sq.ft ) இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு கயிறு மற்றும் தாயத்து அகற்றம் _தாராபுரம் நகர கிளை




திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  நகர கிளை சார்பாக 4-4-2015 அன்று சகோதரர். "சிராஜ்"  அவர்களிடம் இணைவைப்பு குறித்து பிரச்சாரம் செய்து அவர் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு மற்றும் தாயத்து அவிழ்த்து எறியப்பட்டது

19பிறமத சகோதரர்களுக்கு 16புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை


















திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 04-04-15 அன்று   19பிறமத சகோதரர்களுக்கு  இஸ்லாம் தீவிரவாத த்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தனிநபர்  தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்10,  அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம்6 அன்பளிப்பாக வழங்கப்பட்டது