Monday 9 June 2014

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 09.06.2014 அன்று  ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் நடைபெற்றது. பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையிடம் இருந்த கயறு அகற்றப்பட்டது.

"பராஅத் இரவு எனும் பித்அத்" _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 01-06-2014 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷாருக்கான் அவர்கள் "பராஅத் இரவு எனும் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரரின் சிகிச்சைக்கு 1 யூனிட் அவரச இரத்த தான உதவி _நல்லூர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 09.06.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரரின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட A+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

நல்லூர் கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 08.06.2014 அன்று செயற்குழு  மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர்அப்பாஸ் தலைமையில், மாவட்ட பொறுளாளர் சகோ.முஹம்மதுசலீம், மற்றும் மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் அன்வர் பாஷா முன்னிலையில்  கிளை உறுப்பினர்கள் கலந்துகொள்ள  நடைபெற்றது. 
இதில் கீழ்க்கண்டமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.கிளையின் புதிய மர்கஸ் இடம் கிரயம் செய்ய அனைவரும் ஒத்துழைப்பது.
2.பெண்கள் தாவா குழுவை ஒருங்கினைப்பது,
3.தாவா பேனர், 
4.விசிட்டிங் கார்டு அடிப்பது 


உள்ளிட்ட விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்..... 

"இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.06.2014 அன்று  சகோ.இஸ்மாயில்  அவர்கள் "இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழைசகோதரர்க்கு ரூபாய் 500/= வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 08.06.2014  அன்று ஒரு ஏழைசகோதரர்க்கு ரூபாய் 500/=  வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.

"கஅபா" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக09.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "கஅபா" எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

கஅபா


முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா. (திருக்குர்ஆன் 3:96)
ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டடமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் - புனிதப் பள்ளி எனப்படுகிறது.
ஆதமுக்குப் பின் கஅபா சிதிலமடைந்தது. பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக்கட்டளைப்படி அந்தப் பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.
இறைவனின் அற்புதமாக வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் 30 லட்சம் மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது.
அந்தத் தண்ணீர் காரணமாக அந்தப் பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும், மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.
(கஅபா பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் இடங்கள் எனும் உள் தலைப்பிலும், நபிமார்கள் (இப்ராஹீம்) எனும் உள் தலைப்பிலும் காண்க! )
கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் - 2:127, 14:35, 22:26
இறை உத்தரவுப் படி மனைவியையும் பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது-14:37
இவர் கஅபா ஆலயத்தைக் கட்டுவதற்காக தங்கியிருந்த இடம் மகாமே இப்ராஹீம் எனப்படுகிறது - 2:125, 3:97

"எளிய திருமணமே இஸ்லாமிய திருமணம்" _மங்கலம் R.P.நகர் கிளை நோட்டீசுகள் 100 விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 08.06.14 அன்று, மங்கலத்தில் நடைபெற்ற நபிவழி திருமணத்தில் "எளிய திருமணமே இஸ்லாமிய திருமணம்"  எனும்  நோட்டீசுகள் 100  விநியோகம் செய்யப்பட்டது ... அல்ஹம்துலில்லாஹ்.

"பராஅத் இரவு" _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக 08.06.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.குர்ஷித்பானு ஆலிமா அவர்கள் "பராஅத் இரவு"  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...