Thursday 21 April 2011

பயங்கரவாதம் – வன்முறை மற்றும் பைபிள்!

பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.
கிறிஸ்தவர்களில் சிலர், முகம்மது (ஸல்) அவர்கள் வன்முறையைப் போதித்ததாகவும் இயேசு அகிம்சையையும் அன்பையும் போதித்ததாகவும் ஒப்பீட்டுப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதற்கு மாறாக இயேசுதான் வன்முறையைப் போதித்தார் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இயேசுவும் முஹம்மதுவும் (அவர்கள் மீது இறையருள் உண்டாகட்டும்) தார்மீக வழிகாட்டுதல்களுடன் அனுப்பப்பட்ட இறைவனின் அடியார்களும் தூதர்களும் ஆவார்கள். அவர்கள் இருவரிடையே வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடாகும்.
இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் பொய் மார்க்கம் என்றும் கிறிஸ்தவம் தான் படைத்தவனின் உண்மையான வழிகாட்டுதல் – மார்க்கம் என்றும் நிறுவதற்காகவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனில், அவற்றிற்குச் சரியான பதிலளிப்பதும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமையாகிறது!
இஸ்லாம் வன்முறை – பயங்கரவாத மதம் என சாதாரண மக்களை ஏமாற்ற முயலும் இத்தகையவர்கள், தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் “மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்” உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.
மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைவிட மேலாக மதிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உட்பட்ட ஆன்மீகத் தலைவரை ஒற்றை வார்த்தையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கேவல விமர்சனம் செய்வதன் மூலம் தம்மை விட மதவெறி பிடித்தவர்கள் வேறுயாரும் இல்லை என்பதையும் வெளிக்காட்டியுள்ளனர்.
பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.
தாங்கள் செய்த/செய்யும் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் தாங்கள் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது புரோகித வர்க்கம். இதற்காக இவர்கள் இறைவனால் தூதர்களாக தேர்வு செய்யப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயரிலும் கையாடல்கள் செய்வதற்கும்த் தயங்கவில்லை. இதனால் தான் வேதம் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிள், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. ஒருபுறம் தங்களை அமைதிப் புறாக்களாகக் காட்டும் கிறிஸ்தவர்கள், திரைமறைவில் செய்து வரும் வேலைகளைக் குறித்து பலரும் அலட்சியமாகவே இருக்கின்றனர். மிஷினரிகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர்
ஆபாசம், வன்முறை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், பொய்கள் என அசிங்கக் குப்பைகள் நிறைந்துக் கிடக்கும் பைபிளில், புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட அதனை வேதமாகக் கருதும் கிறிஸ்தவர்களே பின்பற்றுவதில்லை என்பது முரண்பாட்டின் உச்சகட்டம்!
"பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!
"மதுபானம் அருந்தாதீர்கள்" என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.
"நீ திருமணம் முடிக்காதவனாக இருந்தால் (திருமணம் முடிக்க) பெண்ணைத் தேடாதே! திருமணம் முடித்திருந்தால் உன் மனைவியை விட்டுவிடாதே" என்று திருமணம் முடித்தல் பாவமா? நன்மையா? என்ற தெளிவான வழிகாட்டுதலை வழங்க பைபிள் தவறியதால் திருமணம் செய்யாமல் உணர்வுகளையும் அடக்க இயலாமல் சன்னியாசம் சென்று பாதி வழியில் வழிதவறி வருபவர்களும் கிறிஸ்தவர்களே!
தலைகுனிந்து ஆசீர்வதித்து அமைதிப்புறாவாக மக்களிடம் காட்சியளித்த அன்றைய போப்பும் கிறிஸ்தவ புரோகிதர்களும்தான் சிலுவை யுத்தம் இறையாட்சியை பூமியில் உருவாக்கும் புனிதப் போர் என்று சிலுவை யுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து இலட்சகணக்கில் மனிதர்களைக் கொன்றொழித்த மாபாதச்செயலைச் செய்தன.
பைபிளின் மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜார்ஜ் புஷ் என்ற கிறிஸ்தவர் தான், ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்யுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக அறிக்கை விட்டார். ஈராக்கில் நசுக்கப்பட்ட இலட்சகணக்கான பிஞ்சுக் குழுந்தைகளும் பலவீனமான பெண்களும் முதியவர்களும் புஷ்ஷின் பார்வையில் இறைவனுக்காக பலியிடப்பட்டவர்கள்!
பைபிள் உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட பயங்கரமான செயல்களையெல்லாம் செய்யவேண்டியது இறைகட்டளையாகவே பைபிளில் உள்ளன என்று கூறினால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுவது இயல்புதான். எனினும் அதுவே உண்மை.
பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் தோண்டப்படும்!

பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா?

2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் பீஜைனுல் ஆபிதீன் அளித்த பேட்டி. பின்னர் இது ஒற்றுமை இதழிலும் வெளியிடப்பட்டது. நேயர்களுக்குப் பயன்படும் என்பதால் இதை வெளியிடுகிறோம்.
பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா?
சமீபத்தில் The Bible and Quran எனும் தலைப்பிட்டு நியூஸ் வீக் வார இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. இக்கட்டுரையைக் குறித்து இஸ்லாமிய அறிஞர் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமும், பிரபல எழுத்தாளர் வலம்புரி ஜானிடமும் பேட்டி எடுத்து கட்டுரை எழுதியுள்ளது கல்கி வார இதழ். கல்கி நிருபர் சித்தார்த், மற்றும் ஸ்ரீநிவாசன் எழுதியுள்ள அக்கட்டுரை வாசகர்களுக்குப் பயனளிக்கும் என்பதால் இங்கே அளிக்கிறோம். ஒற்றுமை 16.03.2002                                                                                                                                                           
www.jesusinvites.comபைபிளும் - குரானும் ஒரே செய்தியைத் தான் சொல்கின்றன.
இரண்டுமே கடவுளின் தூதர்களைப் பற்றியும் மீட்சியைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் தான் பேசுகின்றன. இப்படி இருக்கையில் மதத்தின் பெயரால் போராட்டம் ஏன்? என்று ஆரம்பித்து, நியூஸ் வீக் இதழில் குரானையும் - பைபிளையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது
அந்தக் கட்டுரையிலிருந்து
பைபிளைப் போலவே, குரானிலும் தெய்வீக அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் தெய்வீக அருள் பெற்ற மனிதர்கள் தான் பைபிளை எழுதினார்கள் என்று யூதர்களும், கிறித்தவர்களும், கருதுகிற போது, அல்லாஹ்வின் நிரந்தரமான வார்த்தைகளாகவே குரானை முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். குரான் என்றால் ஒப்பித்தல் என்று அர்த்தம். ஆக, கடவுளின் சொற்களை வெளிப்படுத்த முஹம்மத் ஒரு கருவியாக இருந்திருக்கறார்; அவராக அவற்றை உருவாக்கவில்லை. மேலும், முஹம்மதுவிடம் கடவுள் பேசிய மொழி அரபி, ஆதலால், குரானின் மொழிபெயர்ப்புகள், கடவுளின் அசல் உரைகளுக்கு விளக்க உரைகளாகவே கருதப்படுகின்றன.
பைபிளைப் படிக்கிறவர்கள், ஆபிரகாம், மோஸஸ், டேவிட், ஜான் த பாப்டிஸ்ட், ஜீஸஸ் - ஏன், கன்னிமேரி ஆகிய பெயர்களைக் குரானிலும் பார்க்கலாம். ஆனால், இவர்களைப் பற்றிய செய்திகள் பைபிளில் இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டவை. குரானில், தேவ தூதர்கள் எல்லோருமே முஸ்லிம்கள், உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹீம்), முதல் முஸ்லிம் ஆகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் தமது தகப்பனாரின் மதத்தை ஏற்காமல் அல்லாஹ்வைச் சரண் அடைந்தார்; அவருடைய பெயரும் பைபிளில் குறிப்படப்படவில்லை. இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவில் அவர் காபா கட்டிய குறிப்பும் இல்லை. குரானில் பேசப்படும் மூஸா பைபிளில் வரும் மோஸஸ் போல இருக்கிறார். பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. குரானில் வரும் ஈஸா, பைபிளில் வரும் ஜீஸஸ் போன்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மெக்காவில் முஹம்மதுவை முதலில் மக்கள் நிராகரித்து அலட்சியம் பண்ணியது போலவே அவரையும் வெறுத்திருக்கிறார்கள். ஆனால், ஏசு கடவுளின் குழந்தை என்ற கிறிஸ்தவர்களின் கூற்றை குரான் ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு அறையப்பட்டதைக் கூட மேலோட்டமாகத் தான் சொல்லுகிறது. ஆனால், குரானின்படி ஏசுபிரான் மர்மமான முறையில் இறக்கவில்லை; அல்லாஹ் அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்!
அரசியல் ரீதியாக, மேற்கத்திய நாடுகளில் தற்போதைய நிலை குரானுக்கு எப்படித் தவறாகச் சிலர் அர்த்தம் கற்பிக்கிறார்கள் என்பது தான். குரான் ஒரு ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிச் சொல்லுகிறது. ஆனால், சரித்திரத்தைப் பார்த்தால், மதரீதியான அதிகாரத்துக்கும், இஸ்லாமிய அரசுகளுக்கும், தொடர்ந்து போராட்டம் இருந்து வருவது தெரியும். ஒரு காலத்தில் குரானில் அடிப்படையில் நடுவர்கள் தீர்ப்பளித்து வந்தார்கள். இன்றைய இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்த வரை அதிகாரப்பூர்வமான மதத் தலைமையின் கருத்துக்களுக்கு முழுதுமான மதிப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
எல்லா நாடுகளிலும் உள்ள மதவாதிகளைப் போலவே, முஸ்லிம்களும் தமது விதண்டாவதங்களுக்கு எல்லாம் குரானை ஆதாரம் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்குச் சாதகமாக இவற்றைக் கூற ஆரம்பித்து விடுகிறார்கள். உஸாமா பின் லாடன் அவர்களில் ஒருவர் எனக் கூறலாம்.
மேற்கண்ட கட்டுரை பற்றி மார்க்க அறிஞர் மவ்லவி ஜைனுல் ஆபிதீனிடமும் - வலம்புரி ஜானிடமும் கேட்டோம்.
மத ரீதியான போராட்டம் அல்ல!
ஜைனுல் ஆபிதீன்:
பைபிளிலும், திருக்குரானிலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் அடிப்படையாகவே பல வேறுபாடுகள் உண்டு
1- கடவுளுக்கு மனைவி, மக்கள் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் கிறிஸ்தவம் ஏசுவை கடவுளின் குமாரர் என்கிறது
2- கிறித்துவம் பிதா - சுதன் - பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தைச் சொல்கிறது.
3- மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஒரு பாவமும் அற்றவனாகப் பிறக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது.
4- எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொள்வதற்காக ஏசு தன்னைத்தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்று கிறித்துவம் சொல்கிறது. ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கவே முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது.
5- பாவம் செய்து விட்டால் மதகுருமார்களிடம் Confession செய்வதன் மூலம் பாபநிவர்த்தி அடையலாம் என்று கிறித்துவம் சொல்கிறது. ஆனால் இஸ்லாமோ கடவுளிடம் நேரடியாகப் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று சொல்கிறது.
6-சொர்க்கம், நரகம் பற்றி இரண்டு வேதங்களில் பேசப்பட்டாலும், அதை அடைவதற்கான வழிகளில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. ஒருவன் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப, சொர்க்கமா, நரகமா என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்று மிகத் தெளிவாகவே குரானில் சொல்லப்பட்டிருக்கிறது.
7-பைபிளிலும், குரானிலும் கிட்டத்தட்ட ஒத்த பெயருடைய பலரைப் பற்றிச் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, தாவீது (குரானில் தாவூத்) லோத்து (குரானில் லூத்) ஆகியோரைப் பற்றி பைபிளில் தவறான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. குரான் இதை மறுக்கிறது.
இரு மதங்களுக்கிடையே போராட்டம் என்பது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும், கிறித்துவ மார்க்கத்தைப் பரப்புவதற்காகவோ நிலை நிறுத்துவதற்காகவோ அல்ல. உண்மையில் யூதர்கள் தான் கிறித்தவர்களுக்கு முதல் எதிரி. (கிறித்தவ நம்பிக்கைப்படி) ஏசுவைக் கொன்றவர்கள் மட்டுமல்ல அவர் வாழ்ந்த காலத்தில் இழிசொற்களால் ஏசியவர்களும் யூதர்களே!
எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இஸ்ரேலை ஊக்கப்படுத்தி, முஸ்லிம் நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. உஸாமா பின் லாடனைப் பிடிப்பதற்காக ஆப்கான் மீது படையெடுத்து அப்பாவிகளைக் கொன்றது கிறித்துவ மார்க்கத்தின் நோக்கமாக இருக்கவே முடியாது. ஆப்கான் மீது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டவே இந்தப் படையெடுப்பு.
திருக்குரானில் இரண்டு விதமான கட்டளைகள் உள்ளன. தனி மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை; அரசுகள் பின்பற்ற வேண்டியவை என்று இரு வகைகள். துரதிஷ்டவசமாக குரானில் உள்ள போர் குறித்த கட்டளைகளை, முஸ்லிம் அல்லாதவர்கள் - அதிலும் இஸ்லாத்தை வெறுப்பவர்கள், இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் தர பயன்படுத்திக் கொள்கிறார்கள். குரானில் வெட்டுங்கள்; கொல்லுங்கள் என்ற வசனங்கள் உண்டு. ஆனால், இவற்றைத் தனியாகப் பார்க்கக் கூடாது. இந்த வசனங்களுக்கு முன் உள்ள வசனங்களைப் பார்த்தால் யுத்த களத்தில், செயல்படுத்த வேண்டிய கட்டளைகள் என்பது புரியும் (உதாரணம், இரண்டாவது அத்தியாயம்: 190,191).
முஸ்லிம்களிலும் அரைகுறையாகப் புரிந்து கொள்ளும் சிலர் மக்களைத் தூண்டி ஆள் சேர்ப்பதற்காக இத்தகைய வசனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டுமே தவறாகும்.www.jesusinvites.com
 நன்றி: கல்கி (03.03.2002)

குழந்தைக் கொலையை நியாயப் படுத்தும் பைபிள்!

குழந்தைக் கொலையை நியாயப் படுத்தும் பைபிள்!

இனவெறியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற புரோகித வர்க்கம் தம் ஈனச் செயல்களை நியாயப் படுத்த அவற்றை வேத உபதேசங்களாக்கி மக்கள் மன்றத்தில் வைத்தன. இவர்களின் வெறிச் செயலை படம் பிடித்துக் காட்டும் இன்னொரு சம்பவம் தான் அன்றைய பாபிலோன் மக்கள் மீது கொண்ட வெறுப்பில் அவர்களின் குழந்தைகளைக் கூட கல்லாலடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம். சங்கீத புஸ்தகம் கூறும் உபதேசம் பாருங்கள்.
உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் (சங்கீதம் 137:9)
அக்கிரமத்துக்குப் பழி தீர்க்க வேண்டுமெனில் அக்கிரமம் இழைத்தவர்களைத் தண்டித்தால் நியாயம். அவர்களின் குழந்தைகளையும் பிடித்து பாறை மேல் மோதி அடித்து கொடுமையாக கொலை செய்யும் வன்செயலை பைபிள் போதிக்கிறதே? இது பயங்கரவாதம் இல்லையா?
பச்சிளம் குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் நரவேட்டையாடக் கட்டளையிடும் பயங்கரவாதத்தின் மொத்த உருவம் பைபிள், இவ்வுலகைப் படைத்துப் பரிபாலித்து வரும் படைத்தவனின் வேதம் ஆகுமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்!
பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் இன்னும் தோண்டப்படும்...