Tuesday 1 January 2013

உடுமலைபாரதி அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” 01012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  
01.01.2013 அன்று
உடுமலை சகோதரர்.பாரதி  அவர்களுக்கு "திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.


உடுமலைதினேஷ் குமார்அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” 01012013


01.01.2013 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக
உடுமலை சகோதரர்.தினேஷ் குமார் அவர்களுக்கு திருகுரான் தமிழாக்கம்
,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

அவசர செயற்குழு கூட்டம் _திருப்பூர் _ தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக 
31.12.2012 அன்று  தாராபுரம்  கிளை மர்கஸில்
அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும்
மாபெரும் சிறை நிரப்பும்
போராட்டத்தில்,
தாராபுரம்
கிளை
சார்பில் பெருவாரியான மக்களை
அழைத்து செல்வது  என்றுமுடிவெடுத்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
கலாச்சார சிரழிவான புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா
31.12.2012 அன்று முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில்
நமது இளைஞர்கள் அறியாமையால் புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில்
ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தவர்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் மாநில பேச்சாளர் நேரில் சென்று சந்தித்து
இந்த தீமையின் விளைவை விளக்கினர்.
அல்லாஹுவின் மாபெரும் அருளால் உடனடியாக அந்த மக்கள்

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமையின் விளைவை அறிந்து
பலூன்கள்  ,ஆடியோ சாதனங்கள் உட்பட ஏற்பாடுகளை அப்புறப்படுத்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்.