Wednesday 24 July 2013

திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுப்பிரமணியம் ...சல்மான் ஆக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்த  சகோதரர். சுப்ரமணியம் என்பவர் 19.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மான் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

"வறுமை" _S.V.காலனி ரமலான் தொடர் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 23.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள், பெண்கள்  கலந்துகொண்டனர்.
"வறுமை" எனும் தலைப்பில் சகோ.தீன்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.