Sunday 22 April 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்


        
       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 22/04/2018  ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை காங்கயம் ஸ்ரீ ஹாலில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத்தின் ஆதரவாளர்கள் உட்பட பெரும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு வரை நமது செயல்களை அமைப்பது பற்றி, பல்வேறு கருத்துக்களை ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மாநில செயலாளர்கள் சகோ.E.முஹம்மது அவர்களும், ஆவடி இப்ராஹிம் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளையும், செயல் திட்டங்களும் வழங்கினார்கள்.



அல்ஹம்துலில்லாஹ்