Sunday 9 September 2018

மாவட்ட தர்பியா - திருப்பூர் மாவட்டம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 09/09/2018 அன்று காலை 10:00மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தர்பியா ஆரம்பமானது.




முதல் அமர்வாக சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் இஸ்லாம் கூறும் நிர்வாகம் எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08/09/2018 அன்று
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்


ஆதரவற்ற மூதாட்டிகள் மூவருக்கு ரூ 2000 வீதமும்
மற்றும் நடமாட முடியாத ஒரு மூதாட்டிக்கு ரூ,2000 மதிப்பில் பாய்,தலையணை, இரண்டு புடவை மற்றும் ஆடைகள் மற்றும் மளிகை சாமான்களும்
ஆக மொத்தம் 6ஏழை சகோதரி குடும்பங்களுக்கு ரூ.18000/= மதிப்பில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்