Tuesday 27 August 2013

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை சார்பாக 27.08.2013 அன்று இணைவைப்பிற்கு  எதிராக பிரச்சாரம்  செய்து, ஒரு சகோதரரின்  கையில் இருந்த  இணைவைப்பு கயிறு அவரது ஒப்புதலுடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை _கோம்பை தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 26.08.2013 அன்று கோம்பை தோட்டம் ஜம்ஜம்நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தாவா பணியின் முக்கியத்துவம் _S.V.காலனி கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 25.08.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா  வளாகத்தில் 




தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.



சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "தாவா பணியின் முக்கியத்துவம்"  
எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

மேலும் மார்க்க அறிவை வளர்க்கும் வகையில் கேள்விகள் கேட்டு 
சரியான பதில் வழங்கிய 10 சகோதர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.