Saturday 30 November 2013

அவசர இரத்த தேவைக்கு 2 யூனிட் (B+) இரத்ததானம் _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 30.11.2013 அன்று உடுமலை U.K மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள  சகோதரர்.இப்ராகிம்  அவர்களின் அவசர இரத்த தேவைக்கு  





உடுமலை கிளை சகோதரர்களால் 2யூனிட் (B+) இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைப்பு _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக 29-11-2013 அன்று மாநில தலைமையின் அறிவுரையின் படி  மங்கலம் கிளையுடைய திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது

"ஓரங்களில் குறையும் பூமி " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "ஓரங்களில் குறையும் பூமி" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி  கிளை சார்பாக 29.11.2013 அன்று இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் தனது சந்தேகங்களுக்கு பதில்  அறிய விரும்பிய அவினாசி ஆட்டயம்பாளையம்  பிறமத சகோதரர்.ராதாகிருஷ்ணன் க்கு திருப்பூர் மாவட்ட செயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தெளிவான விளக்கங்கள் வழங்கினார்கள்....

குர்ஆன் வகுப்பு -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி  கிளை சார்பாக 29.11.2013 அன்று அவினாசி  கிளை மர்கசில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் திருகுர்ஆன் விளக்கம்  வழங்கினார்கள்.